Friday, 30 December 2011

விலைவாசி

பயணிக்கின்ற பேருந்தில் கூட
   மக்களின் பெருமூச்சி - இந்த
 நிலையற்ற அரசின்
     நெறியற்ற நிபந்தனைகளால்....

எரிகின்ற  எரிபொருலிள் கூட
       எரிக்கப்படுகின்றன அவர்களின்
சந்தோச நிமிடங்கள்.....

தொழில் துறையில்
      சாதிக்கத் துடிக்கும் உணர்வுகள்
நொறுக்கப்படுகின்றன   அந்த
     அந்நிய செலவாநிஎனும்
அச்சுறுத்தும் ஆலம் விழுதுகளால்...

ஆனால் - மனிதத்தை
     நிலை தடுமாற வைக்கும்
மயக்கங்கள் மட்டும்
     மகுடம் சூட்டப்படுகின்றன
கலி உலகினை நினைவுபடுதுவதாய்...

Saturday, 24 December 2011

முகாம்

உன்னில் ஒளிந்திருக்கும்
     உண்மை உணர்வுகளை
உணருகின்ற வாய்ப்பாய்......

கண்ணில் விழுகின்ற
    தூசிதனை துடைக்கின்ற
கருவறைப் பள்ளியாய்....

சிந்தனையின் சிறகினை
    சிற்ப்பிக்குள்ளே இருந்து
சிதைத்துவிட்ட சிற்பியாய்....

வானத்தின் வனப்பை
    வண்ணமுடன் காட்டி
வாழ்த்துகின்ற வள்ளலாய்.....

எரிகின்ற விளக்கின்
    திரிகளைத் தூண்ட
நினைக்கின்ற நிஜமாய்.....

Saturday, 17 December 2011

அறியாமை

 அறியாமை ஆனாலும் நம் சந்தோசத்தின் ஆதாரமாய்......

வண்ணத்துப் பூச்சியின்
       வண்ணத்தில் இரகசியமில்லையேல்
வியப்பில்லை அது நமக்கு....

தாலாட்டும் தென்றலின்
      திசை தெரிந்தால்
திகைப்பில்லை நமக்கு....

எங்கிருந்தோ வருகின்ற அந்த
     ஒற்றைப் பாடலின்
உள்ளிருப்பு சோகம்
      உணர்ந்திருந்தால் உணர்வுகள்
கிளர்வதில்லை...

இயங்குகின்ற இயந்திரம் நம்
       பாடலுக்கு இசையாகும்
இயல்பினை அறிந்திருந்தால்
       ஆச்சரியமில்லை அது நமக்கு...

மலர்களின் பிறப்பும்
      மாலையின் இறப்பும்
மங்கையின் வனப்பும்
     மலைமுகட்டின் செழிப்பும்
காரணம் அரியப்பட்டிருந்தால்
     நம் மனதுக்குள்
நாமறியாத அந்த
     துள்ளல் இல்லை...

Sunday, 4 December 2011

எத்தனை மனிதர்கள்

மரம் போன்று
     எல்லாத்தையும் எவருக்கும்
அளிப்பவர்கள்...

கொடி போல
     என்றும் அடுத்தவரை
சார்ந்திருப்பவர்கள்....

பூக்களைப் போல
     பூமியில் சிலநேரம் வாழ்ந்தாலும்
சிலிர்க்க வைப்பவர்கள்....

கற்கண்டு போல
     எந்நேரமும் இனிப்பானவர்கள்....

பாகற்க்காய் போல
     கசந்தாலும் உள்ளுக்குள்
வளர்ச்சிக்கு உரமிடுபவர்கள்.....

பலாவை போல்
     வெளிமுரட்டில்
உள்மிருதுவைக் கொண்டவர்கள்....

வாழையைப் போல
    வாழையடிவாழையாய் வாழவைத்து
வாழ்பவர்கள்.....

கானல் நீர் போல
      கற்பனையில் மிதப்பவர்கள்.....

இயற்க்கையைப் போல
      இயல்பில் மாறாதவர்கள்....

இப்படி எத்தனை
      எத்தனையோ மனிதம்
பூமியை அழகாக்கியும்
      அழிவுக்கு கொண்டு சென்றும்.......

Friday, 2 December 2011

விளையும்

ஆசை அழிவுக்கு
     இட்டு செல்லும்...

அறிவு அன்பைத்
     தேடி ஓடும்.....

உண்மை உறவுகளையும்
     பிரித்துப் பார்க்கும்.....

ஊமை உணர்வுகளை
     கட்டி வாழும்.....

கண்ணீர் கனவுகளைக்
     கரைத்து விடும்....

காதல் நிஜ உலகினையும்
     மறக்கச் செய்யும்.....

நட்பு நடக்கின்ற பாதையையும்
     நல்வழி படுத்தும்...
.

Friday, 25 November 2011

கடற்கரை

ஈரத்தை சுமந்த காற்றின்
      மெல்லிய வருடல்...

கண் இமைக்கும் பொழுதில்
      கால்களை நனைத்து செல்கின்ற
கடல் அலை.....

அந்த வானத்தை வருடுகின்ற
      நீரின் நீல நிற தோற்றம்....

பேரலை வந்தாலும்
     ஒய்யாரமாய் நிற்கின்ற
மனித வாகனம்.....

அலையால் கரையை தொட்டாலும்
      அடுத்த நிமிடம்
மண்ணுக்குல் புதைகின்ற
      மண்ணுயிர்கள்....

முத்தையே சுமந்தாலும்
      கரையில் எறியப்படுகின்ற
கிளிஞ்சல்கள்.....

சுற்றிவந்த களைப்பில்
     ஓய்வெடுக்கின்ற கரையோர
கட்டு மரங்கள்...

வாழ்வின் இறுதிவரை ஓடினாலும்
     வாழப்போகின்ற நம்பிக்கை கொடுக்கும்
கலங்கறை விளக்கு....

Saturday, 19 November 2011

மழை

மேகத்தை 
    துரத்திதுரத்தி
வலிமை 
    காட்டும் காற்று...!

மெல்ல மெல்ல
        தரையிறங்கிய
மின்னல் ஒளி
       விட்டுச் சென்ற
ஒளிச் சிதறல்...!

மண் வாசனையை
    விதவிதமாய்
துவக்கி வைக்கும்
    மண் மழையின்
கலப்பு...!

வானிலை 
      மாற்றத்தில்
துள்ளிக் குதித்து
      ஓடுகின்ற
காளைக் கன்று...!

தாய் பறவையின்
      கதகதப்புக்கு
சிறகுக்குள்
      புகுந்து கொண்ட
சிறு பறவை...!
புதிதாய்
       குடை பிடித்த
வெண் காளான்களும்
        அதனருகே
 மழைக்கு ஒதுங்க
      ஒன்று சேர்ந்த 
சித்தெறும்புக்
       கூட்டமும்...!

சாரலில் 
     சுருண்டாலும்
உயிர் கொடுத்த  
     மழைநீருக்கு
புன்னகையில் 
    நன்றி கூறி
கண்ணீர் தாங்கும்
    புதுப்பூக்கள்....!

எழுகின்ற வானில்
        எங்கள் குலம்
வாழ்ந்து கிடக்க
       வானம் பார்த்து
தலை வணங்கி
       நின்றிருந்த 
உழவுக் கூட்டம்...!

அங்கே
      குடிசைக்குள்ளிருந்து
ஒற்றைக் கண்
      மூடி சிரித்த
சிறுவன்...!



Friday, 18 November 2011

அதி காலை

பனித்துளியுடன் புல்வெளி அங்கே
      பறந்து செல்கின்ற
பட்டாம் பூச்சி...!

எழுகின்ற சூரியனின்
    முகப் பொலிவினை
மூடிய கருப்புத் திரையை
     கிழித்துக் கொண்டு வந்த
மெல்லிய கதிர் வீச்சு...!

கொடுத்து விட்ட குரலிள்
      இருள் விலகுவதாய்
கொக்கரிக்கின்ற சேவல்...!

இரவு மீதான பகலின் வெற்றியை
      தம் பல குரல் காட்டி
ஆராவரிக்கும் பறவைகள்...!

நிசப்த நிலமாய்
     நிஜமான ஆற்றலை
உயிரினத்துக்குள் புகுத்துகின்ற இந்த
     அழகான காலை...!

Sunday, 6 November 2011

அன்னை

பாதி வயிறு பசித்திருந்தாலும்
    அவள் பாலூட்ட மறந்ததில்லை......

அழுக்கான ஆடைகளை
    அழகென உடுத்தியிருந்தாலும் நம்
ஆடைகளை சலவை செய்ய மறந்ததில்லை.....

வாழ்வின் மரபினையும்
    கழற்றி வாழ்ந்தவள் நம்
வாழ்வில் மாற்றம் வர....

அவள் கை ஒரு பிடி சோறும் அமிர்தம்
    அக்கலங்கமற்ற அன்பு கலப்பதால்......

Saturday, 5 November 2011

நன்றி


வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........


கருவிழிக்குள் கண்ணீரும்
      கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
     இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
    அந்த இருவிழிப்பார்வைக்கு....

Sunday, 30 October 2011

உணர்தல்

புதிதாய் பூத்த
     பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...

கூட்டுக்குள் வாழ்ந்த
    கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....

முட்டிமுட்டி முலைக்கின்ற
    விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
    முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....

பறந்து திரிகின்ற
    பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....

கல்லறைகள் கூரின
   வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....

இப்படி
      இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
      வாழ்வின் ரகசியத்தை......


Friday, 28 October 2011

காதல்


நிலையற்ற வாழ்வில்
     நிலையான சந்தோசத்தை
நினைவில் நிருத்துகின்ற
    நிபந்தனையற்ற அன்பு...!

உண்மையில் இது
    உலகின் உன்னதம் தான்
உண்மையான உணர்வுகளி ல்
    வாழ்கின்ற வாழ்வை
திரும்பப் பெறுகையில்...!


Thursday, 27 October 2011

மாசுருதல்

மானுடம் வாழ
       மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
      முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....

கறையில்லா காசியில்
      புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
     தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
       தினம் தினம் .....

ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
    ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
    காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
    தினம் தினம்.....


பூமித்தாயின் வயிற்றில்
    குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
    காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
    பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....

Saturday, 22 October 2011

உணரப்படா உழவு

தினமும் வியர்வைத்துளியால்
      வேகாத உடலும்
விதைக்காத
     விதை நெல்லும் முளைத்துவிட....

கானகத்தில் கலம் நின்று
     கருத்துவிட்ட கருணை உள்ளத்தின்
விலா எலும்பும் தோய்வுற்று
    தொல்லை கொடுக்க
கடுகடுக்கும் கால்களால்
     சேருமிதித்து நட்டுவிட்ட நாத்துகளும்
நா லுனாள் பெய்த மழையில்
     நலிந்து விட...

நடை தளர்ந்த காளை மாடும்
     கடும் உழைப்பில் களைப்பாற
காலமில்லாது களமிறங்கி
     பயர் வகையை விதைத்த பின்னும்
விதி விட்ட பாடில்லை
   விளையாடிய கார்மேகம் விரயம் செய்ய
ஒன்றிரண்டு செடிகல் ஓரமாய்...


பூ பூத்து காய்காக்க
     களைப்பறித்து கண்ணில் காத்து
அறுத்துவிட்ட அறுவடை நாளில்
     அறுவர் கொண்ட படை அதன்
தரம் பார்க்க தரிகெட்டு நின்றவனாய்...

தரணியில் தானாய் வாழத்
      தகுதி பெற்றவன் தடுமாறும்
தாறுமாறு உலகம்...

ஊருக்கே உணவலிக்கும்
      உழவனுக்கு உழுதுவிட்ட சேரும்
மட்டும்தான் மிச்சமோ
     சோருகூட எச்சமோ....

Monday, 17 October 2011

அநாதை

அன்னையின் அன்பு உனக்கு
     அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
      நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
      உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......

எவருக்கும் அமைவதில்லை
      அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
       தாய்மடியைத் தவிர......

Sunday, 9 October 2011

கும்பகோணம் தீ விபத்து [16/07/04]

விடியலை உதயம் செய்ய
        உதிக்கின்ற சூரியனே
உன்னிலான இயக்கம் அன்று
       இயங்காமல் இருந்திருக்கலாம்...!

மனித இயக்கதை
      சீரமைக்கும் கடிகார முள்ளே
உந்தன் அசைவு அன்று
     அசைவின்றி இருந்திருக்கலாம்...!

கல்விக் கடல் கரையானதால்
      ஆசைகள் பலமானதால்
கவனம் கரைபுரண்டு
       கல்விக்கண் திறக்க வந்த கல்மனத்தார்
தன் உயிர் காத்து பறந்ததால்...!

எத்தனையோ
      அடையாலம் தெரியா ஸ்பரிசங்கள்
வடுக்களாய் நம்மில் அந்த
       அடையாலம் தெரியா
கொடும் தீயால்...!


Thursday, 29 September 2011

வெளிச்சம்


பகல் இறக்கின்ற
      பொழுதில்
வெண்ணிலவின்
      பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....

கன நாழிகையில்
      கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
      கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....

நான் எரியூட்டிய
      சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
      வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
      இருட்டுக்குள்...

Friday, 23 September 2011

தென்றலின் தேடல்

தேடி வந்த தென்றல்
        தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...

மனித மன நேசத்தை
         அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
         மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
          உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....

Tuesday, 20 September 2011

மனித இனம்


பூமியில் பூத்த
        புதுமலர்கள்
வாடிய வற்றல்
        வண்ணத்துப்பூச்சியின்
சிறகொடிந்த காலம்...

இல்வாழ்வில் இணைந்த
        இருமனப் பூக்கள்
கருகிய மேடை - நம்
        கருவினில் கலைந்த
கற்பத்தின் சிதை காலம்....

கரையோர கற்பக பூக்கள்
        கருவையில்
கலைந்து கிடந்தது நம்
        கன்னத்தின் கருகிய பாகத்தின்
உருக்களின் காலம்....

தொடர் மழையின்
          தோன்றலில்
தொலைந்து போன
          தோகையினை தேடி
இந்த தோகை மயில்கள்....

தன் இனத்தின்
         தடங்களை காக்க முடியாதவன்
அலைகிறான்
         வேற்று கிரகத்தில்
உயிர் வாழும் ரகசியம் தேடி....


Thursday, 15 September 2011

நட்பு

சந்தோச நிமிடங்கலில்
      நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
      பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
      மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
      ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...

Wednesday, 14 September 2011

சரிந்த சடலம்

தன் காதலியிடம் மறைந்து போன ஆன்மாவின் உரையாடல்....

என் உடைந்த எலும்புகளின்
       உதிரத்தின் பிரிவிலும் உன் நினைவு...
சரிந்த என் சடலம் கூறும்
        உன் சரித்திரப் பதிவுகளை...

நின்றுபோன என் இதயத்தில் காணலாம்
         உன் இதய வாயிலை...
என் சடலத்தை சிதைத்துப்பார்- நான்
        கட்டிய உணர்வு சமாதியின் வலிமையை.....

காலமெல்லாம் பேச நினைத்த
       உதடுகள் உருகினாலும்
உருகாது உன் வாய் வந்த
      ஓர் சொல்...

ஏனோ இதயம் தடுமாறி
      என்னை இழந்தேன்
உன்னை அடைவதற்க்குள் - இங்கே
    மண்ணை அடைகிறேன்
உள்மனக் கயாங்களுடன்....

Wednesday, 7 September 2011

நினைவு

நிஜங்கள் கடந்த பின் - அதன்
    நிழல்கள் மட்டும்
நிழற்படத் தகடுகளாய்
    நினைவுகளில்....

உள்ளக்கிடக்கையில்
    வாழும் இந்த
உருவமற்ற உணர்வுக்கோ
    வாட்டம் என்பதில்லை
உயிர் வாழும் வரை....


Tuesday, 6 September 2011

இந்தியனாய்

இதயத்தில்
      துடிக்கின்ற துடிப்புக் கூட அதன்
வெற்றிக்கு வேறாய் இருக்க ஆசை....

அமைதியெனும் அன்புத் தோட்டத்தில்
      பூக்கின்ற பூக்களை
காத்து உயிரை விடுகின்ற
       உன்னத தருணம் வேண்டி ஆசை..

அன்னையின் கருவறை கதகதப்பு
      பத்து மாதம்
அவளின் அரவணைப்பு
     அரைக்காலம் தான் - ஆனால்
இந்தியத் தாயே நீ
     எம் இனத்தின் கருவறையாய்
என்றென்றும்...

உன் மடியின் கதகதப்பில்
      வாழ்கின்ற ஆசை வடிவம்
ஆவல் கொள்கிறது உந்தன்
      கீர்த்தியின் காரணக் கருவில்
ஒற்றை சொல்லாகி
      உன் உயிருக்குள்
புகுந்து மறைய....

Monday, 5 September 2011

தனித்துவம்

மண் சேற்றில்
      மனம் தரும்
தாமரை....

பருக்கை காட்டில்
    பழம் தரும்
பேரிச்சை....

ஊர்வலத்தில்
   மிதிபடும்
பூக்கள்....

தென்னங்குலையில்
   தெரித்த
தேங்காய்....

இவையெல்லாம்
    கனலுக்குள் வழ்ந்தாலும்
கண்ணீரில் நடந்தாலும்
    சந்தோஷத்தை
மட்டுமே கொடுத்து
    வாழ்வன.....

Thursday, 1 September 2011

பூவும் மனிதமும்

சவ ஊர்வலத்தில்
          அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
          காலப்பதிவேட்டின்  நடுவில் இன்றும்....

கண்டவுடன் கடந்த காலக்  கனவிற்கு
         கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள்  சுக துக்கங்களை
         சுமந்து கொண்டு....


Monday, 22 August 2011

உண்மை உறவு


பின்னாளில்
    உதவுவானா அண்ணன்...

நல்லா இருந்தால்
    பெருமை பேசிக்கொள்ள அப்பா...

தேவைகளை
    அடுக்கி கொண்டுவரும் அக்கா...

கீழே விழுந்தாலும்
    எழுந்து வர தோள் கொடுத்து
வாழ்வின் அரைக்காலம்
    கடக்க வாழ்த்தி
வாழ்கின்ற தெய்வமாய் தாய்....


Thursday, 18 August 2011

அழகு

தலையசைத்து
        தென்றலை வரவேர்க்கும்
தென்னையின் கீற்று...

வானத்தில் வலம்வரும்
         சூரியனின் கதிர் வீச்சில
 தலை குனியும் நெற்கதிர்கள்...

முகம் கட்டாது - 
        மனம் மயங்கும் குரலில்
 பாடும் குயில்...

மனம் சருக்கும்
       சந்தத்துடன்
ஓடுகின்ற ஓடை...

கொஞ்சும் குரல் காட்டி - மனம்
         கொள்ளை கொள்ளும் கிளி...

மென்மையான இறகில்
        வன்மனம் கரைக்கும்
வெண் புறா...

பனித்துளியுடன் பிறந்த
   புதுப் பூ...

இவையெல்லம்
      உண்மையான அழகாய்
 உலகத்தின் உலைக்கலம்
      இயங்கும் வரை...


Friday, 12 August 2011

முயற்சி

எத்தனையோ மனிதர்களின்
       தோற்று விழுந்த படிக்கட்டில்தான்
எவரஸ்ட் சிகரம் தொட்ட
       டென்சிங்கின் வெற்றி...

முயற்சியற்ற முடவனாய்
        மண்ணுக்குள் புதைவதை விட
முயற்சித்த பின் தோற்றாலும்
        வெற்றியின் படிக்கட்டாக ஆசைப்படுவது...


Wednesday, 10 August 2011

உண்மைத் தேடல்

பச்சைக் கிளியின்
     சிறகில் அமர்ந்தேன்
உதறிற்று தன்
     சிறகின் கறையென்று.....

பனைக் குறுத்தின்
     திணவுகளாக
மயிலிறகின் மென்மையை
      உணரச் சென்றவன்
உறைந்து போனேன் - அதன்
       உணர்வற்ற வார்த்தைகளில்....

மூடிய தாமரை மொட்டில்
      தரை இறங்கினேன்
காதலியை காண வந்தவன்
      கனலால் கருக்கினான்...

நீரின் ஓட்டத்தின்
     எதிராய் ஓடினேன் - அந்த
மலையருவியின் பிறப்பிடத்தில் - அவர்கள்
      காதலின் இரகசியம்
பித்தனாக்கிற்று என்னை...

எல்லாம் என்னை
       துரத்திற்று
என் தாய் மடியில்
       தலை சாய்ந்தேன்
வாரி அனைத்துக் கொண்டாள் - தன்
       வான்லோகக் கங்கையென்று....


Tuesday, 9 August 2011

கண்முன் தோன்றிய கானல் நீர்

தாயின் அன்பினில்
       தரணியில் தவழ்ந்து
உள்ளக் கதவுகளில்
        உள்ளாசப் பறவையாய்
உள்ளார்ந்த அறிவில்
       அன்றலர்ந்த செந்தாமரையாய்
சொந்தம் கொண்டாடியவன்
       கொண்டு வந்த
பெண்மை பயனற்ற பந்தம்...

பாதகியின் செயலால்
       பால்முகம் கலங்கி
அறுந்து போன -உன்
       இதய நரம்புகளுக்கு
ஆறுதல் கூறா
       எங்களை விலக்கி
எங்கிருந்தோ தன்னை
       தேடிவந்த நண்பன் என நீ
ஏற்ற மயக்கங்களுக்கு
       உண்மை நண்பனாய்
சமர்ப்பனம் செய்தாய் 
       உன்னையே....

இறக்க துடித்தவன்
    மறக்க முடியா துயரம் உன்
வாழ்வில் விரிந்த மொட்டுகள்....

விளக்கு ஏற்றாமல்
       எரியூட்டப்படுவேனோ என
ஏக்கத்தில் விழுந்தும்
       உழுது பயிரிட்டு சென்றாய்
மொட்டுகள் மலர்ந்திட....

அன்று
       நீ கலங்கரை விளக்குதான்
இன்று
       நீ சூரிய வெளிச்சம்
அன்று
      நீ தந்தை தான்
இன்று
      நீ அவர்கள் வழிபடும் தெய்வம்...



Friday, 5 August 2011

நிலையாமை

நினைப்பது நடப்பதில்லை
         நடப்பதை நினைப்பதில்லை- என்றாலும்
நிலையான சுகம் தேடும்
        நெஞ்சத்தின் நினைவுகள் மட்டும்
நிலையானதாய்...


Thursday, 4 August 2011

பற்றுக்கோடுகள்

தோற்றம் தெரியாது
         தொலைகின்ற இதயத்தின் உணர்வுகள்....

எல்லையற்ற ஆசைகளின்
         ஆரம்பப் புள்ளியும் இறுதியும்....

வலையில்லாமல் கூண்டுக்குள்
        வைக்கும் அன்புப் பிணைப்பின்
                 ஒற்றை நாரிதழ்....

வாழ்வில் என்றோ
          மடிந்து போன மழலைப் பருவமும்
                   மனதின் பூரிப்பும்......

நினைவுச் சிலையின் உயிரோட்டமான
         தாயின் கருவறை கன நிமிடங்கள்......

இப்படி எத்தனை எத்தனையோ
       வண்ணக் கோடுகளின்
 எல்லை அறியா ஏமாற்றமும்
             என்றும் தணியா தாகமும்
வாழ்வின் உயிர் நாடியாய்
          நம் இதயதுடிப்பிற்கு
உணர்விருக்கும் வரை...


Wednesday, 3 August 2011

நிவாரணம்

கொத்தளத்தில் அமர்ந்திருந்த
         வெண்குருவி குறி சொல்லிற்று
"உங்கள் இடர் நீங்கி
         குலம் செழிக்குமென்று"............

இங்கே இருள்  நீக்கப்படவில்லை
         வறுமையின் உடல் காப்பாற்றப்பட்டது
                   வாக்கிற்கு வறுமை வந்து விடுமோ என..............



Friday, 22 July 2011

காவலன்

உண்மையான உழைப்பையும்
    உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
    இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
    பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
    பிணக்காவலன்....


வரதட்சணைக் கொடுமை

பூவாய் பிறந்து
    புன்னகையில் பூத்தவள்
கண்ணகியாய்
       காத்திருந்தும்...!

வந்த சொந்தம்
        கருக வைக்க
வாரி இரைத்தது
       மண்ணெண்ணையோ...!



Thursday, 21 July 2011

நம்பிக்கை

கண்ணீருடன்
     நடந்த பாதையும் காவியமாகலாம்
கண்ணகியின்
     பாதச் சிலம்பு போல....


Friday, 15 July 2011

ஆதாரம்

தாயின் கருவறை
          நிசப்தம்....

என்னவென்று புரியாத
    மழலைப் பேச்சு...

திசை அரியா
    தென்றலின் தழுவல்.......

எங்கிருந்தோ வருகின்ற ஒற்றை
    பாடலின் உள்ளிருப்பு சோகம்....

என்றும் புன்னகையுடன்
    பூக்கின்ற பூக்கள்..

காதலனைக் கண்டவுடன்
    மேகத்திற்குள் முகம் மறைக்கும்
வெண்ணிலவின் நாணம்..

இவையெல்லாம் நம்
    சந்தோஷத்தின் ஆதாரமாக...


Thursday, 14 July 2011

முரண்பாடு

பாலையில் 
       நீர் கேட்டு
வளரத்துடிக்கும் 
      ஈச்சம்புதராய் அவன்...!

சிறிது 
     நேர தாகத்தை
தாங்கிக் கொள்ளா 
     மணிப்புறவாய் அவள்...!

சிதறவிட்ட
    உமிழ் நீரில் 
வாழ்கிறது சிலந்தி...!

சிதறவிட்ட
    சிந்தனையில் 
வீழ்கிறது மனிதம்...!

பூக்கின்ற 
     பூக்கள் கூட
பூமியை 
   அழகாக்கிப்  பார்க்கின்றன...!

புதைபடும் 
      மனிதம் நாம்
புதைமண்ணை 
      புரட்டிபோட்டு
புண்ணாக்குகிறோம்
     புதுப்பொருளை உருவாக்கும்
புதைதிருந்த
     பழம் பொருளைத் தேடிதேடி...!


Wednesday, 13 July 2011

எழுச்சி

வாசனை அற்ற
        எருக்கம் பூக்களாய்
எரியப்படுகிறேன்
        எலும்புகள் வாழும்
எரி நிலத்தில்...!

எழும்பிய மேகம் - என்னை
       எழுப்புவதாய் உணர்கிறேன்
உருவாவேன்  - நான்
      எரி நிலத்திலிருந்து
எழுந்த வந்த
     ஏழையின் சேவகனாக...!


Tuesday, 12 July 2011

மூங்கில்

அங்கம் நனையும் ஆசையில்
        மழையினை மணக்கும் மூங்கில்
உயர்ந்தாலும் தாழ்ந்திருப்பேன் என....
       தழுவுகின்ற் குளிர்த் தென்றலில்
தவழுகின்றது தாய் மடியில்
       புரலுகின்ற சேயைப் போல...


அரசியல் வாதி

பரிவு என்ற சொல்லைக் கூறி
          பிரிவு என்ற பிளவை வளர்த்து
வறுமையெனும் கோடு காட்டி
         வளர்ச்சி அடைகின்ற.....
வறண்டு போன மனம்கொண்ட வள்ளல்....


Friday, 8 July 2011

பெண் சிசு தாயிடம்

கருவில் கலையும் பெண் சிசு தன் தாயிடம் கூறும் இறுதி வார்த்தைகள்....


மரணமடைந்து
         மண்ணுக்குள் புதைகிறேன்
உந்தன்
        முகம் பார்ப்பதற்குள்...!

உயிருடன் உடல்
        இணைவதற்குள் பிரிகிறேன்
உந்தன் உலகம்
        உலவுவதற்கு...!

மண்ணில் மரணம்
         என்பது இயற்கை
கருவில் கலைவதென்பது
            என் கருணை...!