மானுடம் வாழ
மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....
கறையில்லா காசியில்
புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
தினம் தினம் .....
ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
தினம் தினம்.....
பூமித்தாயின் வயிற்றில்
குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....
மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....
கறையில்லா காசியில்
புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
தினம் தினம் .....
ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
தினம் தினம்.....
பூமித்தாயின் வயிற்றில்
குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....

No comments:
Post a Comment