Saturday, 14 April 2012

மனிதன் மாறிவிட்டான்

காடுகளிள் அலைந்து
           திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
           நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
           ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
            மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!

அன்பெனும் ஆன்ற
            பெருமை கொன்று
ஆசையெனும்
            ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
            மனிதன் மாறிவிட்டான்...!

பரிவு என்னும்
             பாசவலை அறுத்து
பணமெனும்
            உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

திறமை என்னும்
           தரத்தை மறந்து
தகுதி என்னும்
           தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

No comments: