Sunday, 22 April 2012

வானம்

தூசுத் துகள்களின்
        தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
        தழைக்கின்ற தரணி...!

மேகத்துக்குள்
        முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
          நானத்தின்
திரைச் சீலை நீ...!

மனித இனம்
          உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
          கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
           வாழ்வு கரையாமலிருக்க...!

No comments: