Saturday, 7 April 2012

குழந்தை

மெல்ல தலைசைத்து
        சிரிக்கின்ற குறையில்லா
முழுமதியின் முகம்...!

மனித மன அழுக்குகளை
       ஏற்றுக்கொள்ளாத
பொன் சிரிப்பு...!

தோல்வியை தொடக்கமாக்கும்
       துவளாத இதயத் துடிப்பு...!

கண்களிள் கலங்கமில்லா
      கதை பேசும் கற்பனைகள்...!

இமயத்தைக் கண்டாலும்
        இயல்பில் மாறாத
இமைகளின் துடிப்புகள்...!

துவர்ப்பினை உணராத
        மனிதத்தின்
தூய்மையான துவக்கம்..!

No comments: