Saturday, 31 March 2012

தென்றல்

தென்றலின் வருடல்
    தாய் மடியின் புரலல் போல்
தடம் புரியாமல்
    பெறப்பட்ட சுகம்...!

உன் தழுவலில்
    மனத்தின் தனங்கள்
தணியும் மருத்துவம்
    எங்கு கற்றாயோ...!

நீ தழுவி வந்த
    சுகந்தங்களின் வாசனை
எந்தன் மேலும் உந்தன்
        வருடலின் அடையாலமாய்...!

நீ திரிகின்ற திசையெலாம்
    சுற்றித்திரிய ஆசை
நலிந்துவிட்ட சாபத்தில் உந்தன்
    வருடல் மட்டும் வரமாய்...!

No comments: