Friday, 18 November 2011

அதி காலை

பனித்துளியுடன் புல்வெளி அங்கே
      பறந்து செல்கின்ற
பட்டாம் பூச்சி...!

எழுகின்ற சூரியனின்
    முகப் பொலிவினை
மூடிய கருப்புத் திரையை
     கிழித்துக் கொண்டு வந்த
மெல்லிய கதிர் வீச்சு...!

கொடுத்து விட்ட குரலிள்
      இருள் விலகுவதாய்
கொக்கரிக்கின்ற சேவல்...!

இரவு மீதான பகலின் வெற்றியை
      தம் பல குரல் காட்டி
ஆராவரிக்கும் பறவைகள்...!

நிசப்த நிலமாய்
     நிஜமான ஆற்றலை
உயிரினத்துக்குள் புகுத்துகின்ற இந்த
     அழகான காலை...!

No comments: