Saturday, 19 November 2011

மழை

மேகத்தை 
    துரத்திதுரத்தி
வலிமை 
    காட்டும் காற்று...!

மெல்ல மெல்ல
        தரையிறங்கிய
மின்னல் ஒளி
       விட்டுச் சென்ற
ஒளிச் சிதறல்...!

மண் வாசனையை
    விதவிதமாய்
துவக்கி வைக்கும்
    மண் மழையின்
கலப்பு...!

வானிலை 
      மாற்றத்தில்
துள்ளிக் குதித்து
      ஓடுகின்ற
காளைக் கன்று...!

தாய் பறவையின்
      கதகதப்புக்கு
சிறகுக்குள்
      புகுந்து கொண்ட
சிறு பறவை...!
புதிதாய்
       குடை பிடித்த
வெண் காளான்களும்
        அதனருகே
 மழைக்கு ஒதுங்க
      ஒன்று சேர்ந்த 
சித்தெறும்புக்
       கூட்டமும்...!

சாரலில் 
     சுருண்டாலும்
உயிர் கொடுத்த  
     மழைநீருக்கு
புன்னகையில் 
    நன்றி கூறி
கண்ணீர் தாங்கும்
    புதுப்பூக்கள்....!

எழுகின்ற வானில்
        எங்கள் குலம்
வாழ்ந்து கிடக்க
       வானம் பார்த்து
தலை வணங்கி
       நின்றிருந்த 
உழவுக் கூட்டம்...!

அங்கே
      குடிசைக்குள்ளிருந்து
ஒற்றைக் கண்
      மூடி சிரித்த
சிறுவன்...!



No comments: