Friday, 25 November 2011

கடற்கரை

ஈரத்தை சுமந்த காற்றின்
      மெல்லிய வருடல்...

கண் இமைக்கும் பொழுதில்
      கால்களை நனைத்து செல்கின்ற
கடல் அலை.....

அந்த வானத்தை வருடுகின்ற
      நீரின் நீல நிற தோற்றம்....

பேரலை வந்தாலும்
     ஒய்யாரமாய் நிற்கின்ற
மனித வாகனம்.....

அலையால் கரையை தொட்டாலும்
      அடுத்த நிமிடம்
மண்ணுக்குல் புதைகின்ற
      மண்ணுயிர்கள்....

முத்தையே சுமந்தாலும்
      கரையில் எறியப்படுகின்ற
கிளிஞ்சல்கள்.....

சுற்றிவந்த களைப்பில்
     ஓய்வெடுக்கின்ற கரையோர
கட்டு மரங்கள்...

வாழ்வின் இறுதிவரை ஓடினாலும்
     வாழப்போகின்ற நம்பிக்கை கொடுக்கும்
கலங்கறை விளக்கு....

No comments: