Wednesday, 18 March 2015

இழப்பு

நட்சத்திர ஒளித்
     துகள்கள் தூவிய
மழையினிலே
     நனைகின்ற பூமி...!

அலைகடல் அள்ளிக்
      கொண்டுவந்து
வீசிய சாரலில்
       உருண்டு வந்த
வெண் சங்கு...!

அச்சப்பட்டு
      அனைத்தையும்
ஓட்டுக்குள்
      அடக்கிக் கொண்ட
ஆமை...!

ஆழத்தின் அளவில்
      அமைதி கொண்ட
கடலின்
      மையப் புள்ளி...!

சந்திரனும் தென்றலும்
       கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
      மனித மனங்கள் ...!

No comments: