Thursday, 19 February 2015

இனிமை

மரங்களின் வெறுமை
       வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
      முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
      நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
     புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
      உருவாக்கிய சங்கீதம்...!

மின்னலின் கீற்று
       தொட்டுச்சென்ற
மலை முகடு
       வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
       விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
        இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
       எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
        மழலையின் குரலினிமை...!

No comments: