Thursday, 16 May 2013

உதவும் கரங்கள்

நாளை என்பது
         பயமானால்
இன்றே நம்மை
        கொன்றுவிடும்
நேற்று என்பது
        வலியானால்
வாழ்வு
        தடம் புரண்டுவிடும்...!

கனவுகள் இங்கே
        விதையாகட்டும்
கண்ணீரினை
        துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!

முடியும் என்ற
       சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
       சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
       உதவும் கரங்கள்...!

No comments: