Sunday, 28 April 2013

உழைக்கும் வர்க்கம்

உடல் நடுங்கினாலும்
        நடுங்காத மனதிடம்
இரத்தம் சுண்டினாலும்
       சுருங்கிடாத -  உழக்கின்ற
செல்களின் எண்ணிக்கை...!

ஊர் உறங்கும் போதே
        உதிரம் கொதிக்கத் தொடங்கி
ஊர் அடங்கிய பின்
        உறங்கச் செல்லும்
உலக மாற்றத்தின்
       துறுப்புச் சீட்டு...!

கண்ணில் வலியிருப்பதாலோ
      ஆசைகள் அதிகமிருப்பதில்லை
மானம் மட்டும்
      மனையாகி - அங்கே
அன்பு  ஆட்சிசெய்கின்ற
     ஆலயமாய் - இவ்
உழைப்பாளிகளின்
      உறைவிடம்...!

No comments: