Friday, 26 April 2013

சித்திரா பெளர்ணமி

முழுமுகம் காட்டி
      வலம் வந்த
முழு நிலவு
        வழி காட்ட - அதன்
முகம் பார்த்த
         மயக்கத்தில் தலை குனிந்த
அல்லி  இருந்த      
        தாமரைக் குளம்..!

ஆலயத்தில் உச்சியில்
        ஏற்றப்பட்ட விளக்கு  - அதில்
அசைந்தாடிய
       தீப ஒளி
வீதியெங்கும் வழங்கப்பட்ட
      அன்னதானம் - அங்கே
ஆராவாரமிட்ட
       மனிதக் கூட்டம்...!

பூவாடை அணிந்திருந்த
        பூங்கலசமும்
பொன்னாடை அணிந்திருந்த
        தெய்வத் திருமகனும்
நிலவின் அழகுடன்
       போட்யிடுவதாய்
அத்தருணம்...!

No comments: