முழுமுகம் காட்டி
வலம் வந்த
முழு நிலவு
வழி காட்ட - அதன்
முகம் பார்த்த
மயக்கத்தில் தலை குனிந்த
அல்லி இருந்த
தாமரைக் குளம்..!
ஆலயத்தில் உச்சியில்
ஏற்றப்பட்ட விளக்கு - அதில்
அசைந்தாடிய
தீப ஒளி
வீதியெங்கும் வழங்கப்பட்ட
அன்னதானம் - அங்கே
ஆராவாரமிட்ட
மனிதக் கூட்டம்...!
பூவாடை அணிந்திருந்த
பூங்கலசமும்
பொன்னாடை அணிந்திருந்த
தெய்வத் திருமகனும்
நிலவின் அழகுடன்
போட்யிடுவதாய்
அத்தருணம்...!
No comments:
Post a Comment