Saturday, 6 April 2013

விளங்கும்

பிறந்த நாளிளே
          இறந்தாலும்
இறகுகள் வலிக்க
         பறந்து பறந்து
வாழ் நாளை
         வசந்தமாக்கும்
மே பூச்சி...!

உடல் தாங்கும்
        இறகின்றியும் 
இயற்க்கை
       அமிர்தம்  படைக்கும்
தேனீக்களின் படை...!

 சிறு சிறு உருவமாய்
        சிதையாத உறவுகளில்
சித்தெறும்பு
        சிறுவளைக்குள்
சேர்த்து வைத்த
        சிறப்பியல்பு...!

தவறி கீழே
       விழுந்தாலும்
தன்னம்பிக்கையில்
        தன்னியல்புக்கு
திரும்புகின்ற
        சிலந்தி...!

வாழ்வதற்க்கு பலம் பெற
      கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஊண்மையான சுதந்திரத்தில்
       சுற்றித் திரிகின்ற
பட்டாம் பூச்சி...!

சிறு சிறு ஜிவனும்
       சந்தோசத்தின்
வழி காட்டியாய்
        மதிக்கின்ற அன்பினில்
மறக்க வேண்டிய
       விரோதத்தை...!

No comments: