Friday, 5 April 2013

அன்பு

கேட்டு கிடைப்பதில்லை
        கிடைத்ததற்க்கு கேட்பதில்லை
ஒவ்வொறு ஊனுக்குள்ளும்
         உடைமைகளைத் தாண்டி
உணர்வுகள் தேடுகின்ற
         உன்னத மருந்து...!

இது இருக்குமிடம்
         தவறு நடப்பதில்லை
இல்லாதிடத்து தவறுகள்
         இல்லாமல் இருப்பதில்லை
சந்தோசம்
         இருப்பதற்க்கும்
இறப்பதற்க்கும்
         நிஜமான காரணி...!

அன்னையிடம் கிடைக்கின்ற
         எதிர் பார்க்கா அன்பு
நண்பர்களிடம் பெறுகிற
         எதார்த்த அன்பு
துனைவியிடம் தரப்பட்ட
         பகிர்கிற அன்பு
குழந்தைகளிடம் குடிகொண்ட
         அக்கறையான அன்பு - என
அன்பின் உருவம்
         மாறினாலும் மனிதம்
மறுக்காமல்
          ஏற்க்க நினைக்கிற
நிலயான ஆதாரம்...!

No comments: