உயிர் பாதி இழந்தாலும்
உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
உடைமையென...!
வல்லுருவின்
வலிமையில்
அனுப்பி வைத்த
சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
தாயின் துயர ரேகைகள்...!
கருணையில்லா
புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல்
நிதியனுப்பியது - அவன்
அடக்க
சடங்கிற்க்கு...!
தினம் தினம் சரிகிற
சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
குறை மனதுடையவர்களால்...!
No comments:
Post a Comment