Friday, 1 March 2013

இளைஞ்சன்

நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

சாதி என்பார்
         சமயம் என்பார்
சரிந்துவிடாதே
         சாக்கடைக்குள்
சரிந்துவிடாதே...!

சமத்துவம் என்னும்
        சத்தியத்தில்
சரித்திரம் படைக்கும்
       வல்லமை  உனக்கிருக்க...!

சிறு மனதுடன்
       கூட்டம் சேர்த்து
குவித்து வைக்கிற
        பணமும் -  அதில்
குற்றமற்றவரை
       குற்றவாளியாக்கும்
ஆளுமையையும்
        அழிந்து போகட்டும் - உன்னில்
அழிந்து போகட்டும்..!

அன்பு மட்டும்
       விதையாகி
தனிமனித சுதந்திரத்தில்
         திளைக்கின்ற
தரணி உனதாகட்டும்...!

 நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

No comments: