Thursday, 21 March 2013

சிறு புள்ளி

சொட்டுகின்ற 
        வியர்வைத்  துளியில்  
பெற்றுவிட்ட செல்வம் - அங்கே
        குறைந்து போகா
உறவுகளின் நிம்மதி...!
 
தன்னம்பிக்கை உடனிருக்க
    தடுமாற்றத்தினில் 
சோரம் போகா
          மனித வாழ்வு ...!

துரத் நினையா
       மனிதனின் வெற்றியும்
துரத்தகின்ற
      மனக் கனவில்
மறைந்து போகின்ற
       பயண மலைப்பும்...!

உலத்தின் அளவில் - நீ
         சிறு புள்ளியானாலும்
உறங்குவது நிம்மதியின்
        ஊஞ்சலாகட்டும்
பஞ்சனையில்
         புழுங்குகின்ற மனதை விட...!

No comments: