Sunday, 10 March 2013

மலையருவி

மலையருவி மண்பார்க்கையில்
          சிதறிய சில்லுகலாய்
நீர்த் திவலைகள்
         அலங்கரித்திருந்த
அன்றலர்ந்த மலர்கள்...!

மூலிகைச் செடியில்
        முகம் புதைத்து
மெல்ல மெல்ல
        வருடிச் சென்ற காற்று...!

வான் மகளின்
         பிரிவுதனில்
தண்ணீரின் தற்க்கொலை
       முயற்சியை
தாங்கி பிடித்த
       நில மகளின் தாய் மடி...!

நிஜமான வளமென
         நீண்டுவிட்ட மரங்களும்
 நிசப்த நிலத்தினை
         நிலை குலைக்கின்ற
நீரோடையின்
        சலசலப்பும்...!

காணுமிடமெல்லாம்
        பசுமை நிறைந்திருக்க
கண்களுக்குள்
        பதிந்துவிட்ட
கலையழகாய் - இப்
        பூஞ்சோலை...!

No comments: