Thursday, 11 April 2013

போர் வீரன்

நெஞ்சில் குத்திய
        வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
       முகங்கள் மறப்பதில்லை...!

ஒரு நிமிடம் உறவாகி
        மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
        வாழாது  பிறந்த
மண்ணை முத்தமிட்டு
        உயிர் துறக்கத்
துணிந்தவன்...!

தீவினைத் தருவதானாலும்
       தரத்தினை இழக்கா
வாள் முனையை
       ஏந்தி நின்று
வதைக்கின்ற
       வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
        வீரு நடை போட்டவன்...!

களத்தில் உயிர் பிரிந்தாலும்
       கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
       உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!

No comments: