Sunday, 6 November 2011

அன்னை

பாதி வயிறு பசித்திருந்தாலும்
    அவள் பாலூட்ட மறந்ததில்லை......

அழுக்கான ஆடைகளை
    அழகென உடுத்தியிருந்தாலும் நம்
ஆடைகளை சலவை செய்ய மறந்ததில்லை.....

வாழ்வின் மரபினையும்
    கழற்றி வாழ்ந்தவள் நம்
வாழ்வில் மாற்றம் வர....

அவள் கை ஒரு பிடி சோறும் அமிர்தம்
    அக்கலங்கமற்ற அன்பு கலப்பதால்......

No comments: