Saturday, 10 March 2012

மங்கை

கடவுளின் வலிமயற்ற       
      படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
      குருச்சேத்திரப் போர்...!

பொறுமை என்னும்
      போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
       மதுரை இங்கே...!

மனித இன உணர்வுகளின்
       கருவறை  - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
      உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!


சிறுமியாய் வாழத் தொடங்கி
       சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
       எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
      விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!

No comments: