Saturday, 5 May 2012

கோடை

எழுகின்ற சூரியனின்
          இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!


எற்றுக்கொண்ட தாகத்தை
        இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!


வறண்டு போன
        பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!


கண்ணிமைக்கும் நேரத்தில்
       கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
       மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
        மண்வாசனையும்...!

No comments: