உந்தன் உதிரத்தில்
உருமாறியா உடல்...!
உந்தன் மூச்சிக்காற்றில்
சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!
உந்தன் முகம் பார்க்க
முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!
பசிப்பதற்கு முன்
பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!
நிஜ மனிதனாய்
நில உலகில்
நடமாட துடித்த
நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
நிஜதினமாய்...!

No comments:
Post a Comment