Sunday, 30 October 2011

உணர்தல்

புதிதாய் பூத்த
     பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...

கூட்டுக்குள் வாழ்ந்த
    கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....

முட்டிமுட்டி முலைக்கின்ற
    விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
    முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....

பறந்து திரிகின்ற
    பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....

கல்லறைகள் கூரின
   வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....

இப்படி
      இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
      வாழ்வின் ரகசியத்தை......


No comments: