Sunday, 9 October 2011

கும்பகோணம் தீ விபத்து [16/07/04]

விடியலை உதயம் செய்ய
        உதிக்கின்ற சூரியனே
உன்னிலான இயக்கம் அன்று
       இயங்காமல் இருந்திருக்கலாம்...!

மனித இயக்கதை
      சீரமைக்கும் கடிகார முள்ளே
உந்தன் அசைவு அன்று
     அசைவின்றி இருந்திருக்கலாம்...!

கல்விக் கடல் கரையானதால்
      ஆசைகள் பலமானதால்
கவனம் கரைபுரண்டு
       கல்விக்கண் திறக்க வந்த கல்மனத்தார்
தன் உயிர் காத்து பறந்ததால்...!

எத்தனையோ
      அடையாலம் தெரியா ஸ்பரிசங்கள்
வடுக்களாய் நம்மில் அந்த
       அடையாலம் தெரியா
கொடும் தீயால்...!


No comments: