Thursday, 29 September 2011

வெளிச்சம்


பகல் இறக்கின்ற
      பொழுதில்
வெண்ணிலவின்
      பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....

கன நாழிகையில்
      கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
      கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....

நான் எரியூட்டிய
      சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
      வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
      இருட்டுக்குள்...

No comments: