Tuesday, 20 September 2011

மனித இனம்


பூமியில் பூத்த
        புதுமலர்கள்
வாடிய வற்றல்
        வண்ணத்துப்பூச்சியின்
சிறகொடிந்த காலம்...

இல்வாழ்வில் இணைந்த
        இருமனப் பூக்கள்
கருகிய மேடை - நம்
        கருவினில் கலைந்த
கற்பத்தின் சிதை காலம்....

கரையோர கற்பக பூக்கள்
        கருவையில்
கலைந்து கிடந்தது நம்
        கன்னத்தின் கருகிய பாகத்தின்
உருக்களின் காலம்....

தொடர் மழையின்
          தோன்றலில்
தொலைந்து போன
          தோகையினை தேடி
இந்த தோகை மயில்கள்....

தன் இனத்தின்
         தடங்களை காக்க முடியாதவன்
அலைகிறான்
         வேற்று கிரகத்தில்
உயிர் வாழும் ரகசியம் தேடி....


No comments: