Tuesday, 6 September 2011

இந்தியனாய்

இதயத்தில்
      துடிக்கின்ற துடிப்புக் கூட அதன்
வெற்றிக்கு வேறாய் இருக்க ஆசை....

அமைதியெனும் அன்புத் தோட்டத்தில்
      பூக்கின்ற பூக்களை
காத்து உயிரை விடுகின்ற
       உன்னத தருணம் வேண்டி ஆசை..

அன்னையின் கருவறை கதகதப்பு
      பத்து மாதம்
அவளின் அரவணைப்பு
     அரைக்காலம் தான் - ஆனால்
இந்தியத் தாயே நீ
     எம் இனத்தின் கருவறையாய்
என்றென்றும்...

உன் மடியின் கதகதப்பில்
      வாழ்கின்ற ஆசை வடிவம்
ஆவல் கொள்கிறது உந்தன்
      கீர்த்தியின் காரணக் கருவில்
ஒற்றை சொல்லாகி
      உன் உயிருக்குள்
புகுந்து மறைய....

No comments: