Saturday, 17 December 2011

அறியாமை

 அறியாமை ஆனாலும் நம் சந்தோசத்தின் ஆதாரமாய்......

வண்ணத்துப் பூச்சியின்
       வண்ணத்தில் இரகசியமில்லையேல்
வியப்பில்லை அது நமக்கு....

தாலாட்டும் தென்றலின்
      திசை தெரிந்தால்
திகைப்பில்லை நமக்கு....

எங்கிருந்தோ வருகின்ற அந்த
     ஒற்றைப் பாடலின்
உள்ளிருப்பு சோகம்
      உணர்ந்திருந்தால் உணர்வுகள்
கிளர்வதில்லை...

இயங்குகின்ற இயந்திரம் நம்
       பாடலுக்கு இசையாகும்
இயல்பினை அறிந்திருந்தால்
       ஆச்சரியமில்லை அது நமக்கு...

மலர்களின் பிறப்பும்
      மாலையின் இறப்பும்
மங்கையின் வனப்பும்
     மலைமுகட்டின் செழிப்பும்
காரணம் அரியப்பட்டிருந்தால்
     நம் மனதுக்குள்
நாமறியாத அந்த
     துள்ளல் இல்லை...

No comments: