Sunday, 4 December 2011

எத்தனை மனிதர்கள்

மரம் போன்று
     எல்லாத்தையும் எவருக்கும்
அளிப்பவர்கள்...

கொடி போல
     என்றும் அடுத்தவரை
சார்ந்திருப்பவர்கள்....

பூக்களைப் போல
     பூமியில் சிலநேரம் வாழ்ந்தாலும்
சிலிர்க்க வைப்பவர்கள்....

கற்கண்டு போல
     எந்நேரமும் இனிப்பானவர்கள்....

பாகற்க்காய் போல
     கசந்தாலும் உள்ளுக்குள்
வளர்ச்சிக்கு உரமிடுபவர்கள்.....

பலாவை போல்
     வெளிமுரட்டில்
உள்மிருதுவைக் கொண்டவர்கள்....

வாழையைப் போல
    வாழையடிவாழையாய் வாழவைத்து
வாழ்பவர்கள்.....

கானல் நீர் போல
      கற்பனையில் மிதப்பவர்கள்.....

இயற்க்கையைப் போல
      இயல்பில் மாறாதவர்கள்....

இப்படி எத்தனை
      எத்தனையோ மனிதம்
பூமியை அழகாக்கியும்
      அழிவுக்கு கொண்டு சென்றும்.......

No comments: