Saturday, 24 December 2011

முகாம்

உன்னில் ஒளிந்திருக்கும்
     உண்மை உணர்வுகளை
உணருகின்ற வாய்ப்பாய்......

கண்ணில் விழுகின்ற
    தூசிதனை துடைக்கின்ற
கருவறைப் பள்ளியாய்....

சிந்தனையின் சிறகினை
    சிற்ப்பிக்குள்ளே இருந்து
சிதைத்துவிட்ட சிற்பியாய்....

வானத்தின் வனப்பை
    வண்ணமுடன் காட்டி
வாழ்த்துகின்ற வள்ளலாய்.....

எரிகின்ற விளக்கின்
    திரிகளைத் தூண்ட
நினைக்கின்ற நிஜமாய்.....

No comments: