தென்றலை வரவேர்க்கும்
தென்னையின் கீற்று...
வானத்தில் வலம்வரும்
சூரியனின் கதிர் வீச்சில
தலை குனியும் நெற்கதிர்கள்...
முகம் கட்டாது -
மனம் மயங்கும் குரலில்
பாடும் குயில்...
மனம் சருக்கும்
சந்தத்துடன்
ஓடுகின்ற ஓடை...
கொஞ்சும் குரல் காட்டி - மனம்
கொள்ளை கொள்ளும் கிளி...
மென்மையான இறகில்
வன்மனம் கரைக்கும்
வெண் புறா...
பனித்துளியுடன் பிறந்த
புதுப் பூ...
இவையெல்லம்
உண்மையான அழகாய்
உலகத்தின் உலைக்கலம்
இயங்கும் வரை...
No comments:
Post a Comment