Friday, 28 December 2012

கிருஸ்துமஸ்

 திகைக்கின்ற இருட்டுக்குள்
       தீமைகள் பரவியிருக்க
வாழ்விற்க்கு வழிகாட்டும்
       ஒளி பிறந்த நன்நாள்...!

கண்-பார்வை குறைபாட்டினில்
       கலங்கிய கன்னித்தாயினுடைய
கலக்கங்கள் கரைந்த
        காலைப் பொழுதினில்...!

தேவதைகள் வழி காட்ட
        தொழுவத்தில் பிறந்தாலும்
திளைக்கின்ற ஆனந்தத்தில்
       அறிமுகப் படுத்தப்பட்ட
நாயகன்...!

சிலுவையில் அறையப்பட்டாலும்
         அடிமை அல்ல
ஆணைக்கு அடி பணியா
         ஆருயிர்க் காவலன்...!

அன்பினில் வாழ்ந்து
        இருள் விலக - அன்றே
ஆலயத்தில் ஏற்றப்பட்ட
        அகல் விளக்கு...!

Friday, 21 December 2012

நீரோடை

நீரின் சல சலப்பில்
         சிதறுகின்ற அமைதி
மெல்ல மெல்ல கரை
          தொட்டு செல்லும்
அன்பினில் - தன்னையே
          அற்ப்பனிக்கின்ற
அணைக் கரைகள்...!

ஓடுகின்ற நீரின்
          ஓட்டத்தில்
ஒட்டி வாழாமல்
           துரம் குறைக்க
துள்ளிக் குதிக்கின்ற 
          மீன்களின் ஆராவாரம்...!

எங்கோ பிறிந்த
           நினைவுகளில்
நீண்ட துரம் கடந்து
         கலக்கின்ற நொடிப் பொழுதினில்
கிளை நதிகளின்
           கிறுக்கள் மொழிகள்...!

நள்ளிரவில்
            நிலவு பயணிக்கின்ற
பல்லக்காகி  நம்
             பார்வையில் படர்கின்ற
பசுமையின் பிறப்பிடம்...!

Saturday, 15 December 2012

தேடல்


கல்வி

கண்கள் திறப்பதும்
      கலைகள் பிறப்பதும்
காவியங்கள் உருவாவதும்
      இக்கலைமக்களின் தேடல்...!

காதல்

பாசறையில்
      பணியாலனை தேடாது
அன்பில் வாழ நினைக்கும்
     ஆன்மாவின் துணைத் தேடல்...!


அனுபவம்

வாழக்கற்றுக் கொள்ள
     வழுக்கிய பாதையிலும்
சந்தோச நிமிடங்களிலும்
     சிதறிக் கிடைக்கின்ற
புதையளின் தேடல்...!


வாழ்வு

வசந்தத்தின் வருகைக்கான
      வெற்றியின் தேடல்...!

வாழ்வின் வலிமைகளிலும்
      வாழச் சொல்லும்
உண்மை உறவுகளின்
      துணைத் தேடல்...!

Friday, 7 December 2012

நிலவரம்

ஆயிரங்கள் கரைகின்றன
       ஆட்டத்தில் ஏழைகளின்
அடிவயிறு பசித்ததிருந்தாலும்...!

நாடகங்கள் நிகழ்தத்தப்படுகின்றன
        நடுத்தர மக்களின்
நரம்புத் துடிப்புகள்
        நடுக்கம் கண்டாலும்...!

ஊர் தலைவர்கள் - இங்கே
        உல்லாசத்தில்
உழைப்பின் உதிரங்கள்
        உதாசினப் படுத்த்ப்பட்டாலும்...!

மாளிகைகள் மகுடம்
       சுட்டிக்கொள்கின்றன
இரக்கமெனும்
       மாண்பிணை மறந்திருந்தாலும்...!

Friday, 30 November 2012

நிலவு

பத்து மாதம் சுமந்தவள்
         பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
        அதிசயம்...!

தினம் தினம்
        தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
        தொடர்கின்ற துணைவி ...!

இருள் கொண்டு வாழ்ந்தாலும்
       ஒளி கொண்டு சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!

Sunday, 18 November 2012

கஷ்ட காலம்

சுடு மணலின்
        சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
       சூழ்ந்து நிற்க்கின்ற 
நிமிடங்களாய்...!

 சந்தோசமற்ற சறுக்கல்களில்
       மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
        உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!

 தடுமாறுகின்ற தினங்களில்
        துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
         நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
       அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!

Tuesday, 13 November 2012

தீபம்


பூசி வைத்த இருட்டுக்குள்
       புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
       விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
       இரவுச் சுரியனாய்...!


வளத்தில் வழிகின்ற குளம்
       தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின்  வேராக - அதில்
      வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!

Saturday, 3 November 2012

படியில் பயணம்

தொடர்வண்டியில் தொங்குகின்ற
      ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
      உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!

எதனை மயக்க
      இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
      மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!

அவள் செலவழித்த
       நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
      நினைவுதான் ஏனோ...!

பெற்றதனைத்தும்
      அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
     அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
     அவர்களின் கருவிழி...!

Saturday, 27 October 2012

இருமாப்பு

உறவுகள் இருக்கையில்
        இழக்க மறுத்து
இழந்தபின்
         நினைவுகளில் நெருடுகின்ற
நெறுஞ்சி முற்களாய் - இந்த
         இருமாப்பு...!

Saturday, 20 October 2012

காட்சி

தூரலை துணையாக்கி
      துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
       உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!

மின்சாரமில்லா அரங்கத்தை
      மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
      கலந்துவிட்ட ஆலய மணியோசை...!

இயந்திரத்தின் அசைவுகளில்
      தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர்  உறுப்புகளின்
       உன்னத ஓய்வு...!

வறச்சியினை நீக்க வந்த
      நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
       வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
       ஏற்ப்பட்டு போன வறச்சி...!

மொத்தத்தில் - நம்
      மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
      வீதியெங்கும்...!

Sunday, 14 October 2012

முன் இரவு

கதிரவனின் கடை பார்வையினை
         காரிருள் மெல்ல
வெற்றி கொள்ளும் நேரம்...!

தன் உணர்விழந்து
        ஆட்டமிடுகின்ற
அணிப்பிள்ளையின்
        ஆனந்த கூச்சல்...!

தென்றலின் தழுவலில்
        தன்னை சமர்ப்பனம் செய்யும்
சருகுகளின் சலசலப்பு...!

அரை நிலா அறை முற்றத்தில்
        வளம் வந்து கொண்டிருக்க
வெண்மை மேகம் மெல்ல
        அதன் நாணத்தை
மறைப்பதற்க்கான முயற்ச்சி...!

முழு இருளும் அங்கில்லை
        வெளி முழுவதுமான
வெளுப்பும் அங்கில்லை
        வெற்றியும் தோல்வியும்
பரிமாரிக்கொள்ளும் அனுபவத்தில்
        அழிந்துபோகும் ஆனவமாய் - இந்த
பகளிருல் பாலம்...!

Saturday, 6 October 2012

கலப்பு

கண்ணீரும் கலகலப்பும்
       வலியும் வெற்றியும்...!

இரக்கமும் இருமாப்பும்
      பாசமும் வேசமும்...!

அன்பும் ஆத்திரமும்
      காதலும் காமமும்...!

சந்தோசமும்
      சருக்கிய பாதையின் வடுக்கலும்...!

மனித வாழ்வை நிறப்ப வந்த
      இரட்டை குழந்தைகளாய்...!

கண்ணீர் மட்டும்
      காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
      வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!

என்ற மகத்துவத்தாலோ
       இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
        மனித வாழ்வு...!

Sunday, 30 September 2012

நடைபாதை மாற்றம்

கனவுகளை காண்கின்ற
       சிந்தனையின் சிறகுகள்...!

ஊரின் நினைவுகளை
       நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!

சிதைத்தாலும் கூண்டுக்குள்
       வாழ நினைக்காத
நிந்தனைகள்...!

மனதில் தோன்றுகின்ற
        பரிவினை மறுக்காத மனம்...!

அன்னையின் இதயத்துடிப்பில்
       ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!

தடுமாரிய தடங்களை
       தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!

முன்னேற்றத்திற்க்கு முன்னே
       உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
       மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!

Saturday, 22 September 2012

கவிதை

உள்ளத்தில் உறைந்திருக்கும்
        கருப்பொருளை கல்லறையில்
சேர்க்காத கனவுகளின்
        காகிதக் கிறுக்கல்கள்...!

Friday, 21 September 2012

சொந்தம்

செத்துபோன சடலத்திற்கு
        சடங்கு செய்ய
உயிருள்ள ஜீவனை
        உதரித்தள்ள
உண்மை உணர்வுகளை
       விற்று விட்டு
நட்புடன் நடித்து பார்க்கும்
        நாகரிகக் கூட்டம்...!

பணமிருந்தால்
        பிணைந்துவிடும் பந்தம்
மனதை மட்டும் மறந்து விடும்
       மிடுப்புகளின் குழுமம்...!

உறுத்துகின்ற உறவுகளை
        உதறிவிட்டு - வாழ்வின்
வலிமையை கடக்க
        உடனிருக்கும் ஊண்களுக்காக
வாழ்கின்ற வாழ்வை
        சொந்தமாக்குங்கள் - இதன்
சுயத்தினை உணர்ந்து கொள்ள...!

Saturday, 15 September 2012

சந்தோசம்

கூண்டுக் கிளி
      கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!

கூட்டுப்புழு
      உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
      பறக்கையில் சந்தோசம்...!

அன்னையின் அடிவயிற்றில்
      சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
     அறுவதும் சந்தோசம்...!

சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
      சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!

மனிதத்திற்க்கு தன்னை
      வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!

இவையெல்லாம்
      வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
      வரவேற்க்கின்ற சந்தோசம்...!

Saturday, 8 September 2012

வானவில்

வீசுகின்ற தென்றல்
        வீணையில் இசை மீட்டி
அதிருகின்ற அதிர்வைப் போல்
        மண் மீது மோதித் தெரிக்கின்ற
மழைத் துளிகள்...!

விட்டுவிட்டு பொழிகின்ற
       சாரல்கள் சரீரத்தில்
சருக்குகின்ற
       சங்கமத்தின் வருடல்கள்...!

அழகான மழைத்துளியின்
      அன்பான அர்ப்பணிப்பில்
திளைத்து விட்ட
      கதிரவனின் மெல்லிய
கதிர் வீச்சு...!

மோதிய மழைத் துளியில்
      சிதரிய சிற்ப்பங்களாய்
பகலவனின்
      கதிர் திரையில் தோன்றிய
வண்ணச் சிதறல்...!
 

Monday, 3 September 2012

மௌனம்

மாலையின் மௌனத்திற்க்கு
      மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!

புல்வெளியின் மௌனத்தில்
      புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
      ஈரக்காற்று...!

தடு மாறிய குரலில்
      பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
      முகம்...!

அதிகார வர்க்கத்திடம்
       உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
       ஏழையின் மௌன மொழிகள்...!

மனதின் அழகினை
       மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
        உள்ளத்தின் ஊமைக்குரல்...!

Saturday, 18 August 2012

ஓவியம்

வானத்தின் நீலத்தில்
       வரையப்பட்ட வண்ண மலர்கள்...!

தென்றலின் சல சலப்பை
       சிதரிய நிறங்களில்
நினைவூட்டும் அசைவுகள்...!

வெண்மை நிற ஆடையில்
      ஓடுகின்ற வெள்ளோட்டம்...!

அமைதியான சூழலை
       அனுபவமாக்கும் ஆலயம்...!

எழுகின்ற திசையில்
        முகம் காட்டும் சூரியன்...!

ஒவ்வொன்றும் ஒப்பனையில்
        ஒன்றாய் கலந்து விட்ட
ஒய்யார ஓவியம்...!


Saturday, 11 August 2012

தேர் திருவிழா

தென்னையின் விளைவுகள்
        வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
        அலங்கறிக்க…!

வானவில்லின் வண்ணச்சிதறலும்
       மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
      அலங்கார விளக்காக…!

தெருவெங்கும் மனக்கின்ற
      மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
     வாசனை திரவியங்களும்...!

மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
      மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
      மாவிலை தோரணங்களும்...!

எரியூட்டப்பட்ட விளக்கு
       கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
       ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!

மின்னலும் இடியும்
     இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
     வளம் வருகிற
தெய்வ பவனி…!

Wednesday, 1 August 2012

வார்த்தை

பிறந்த குழந்தையின்
      பிழையான சங்கீதம்...!

பழகிய நாவில்
      தத்தையின் பிதற்றல்...!

காதுகளில் முனுமுனுக்கின்ற
       கதலர்களின் காந்தக் குரல்...!

பிரிந்த சேயை
       சேருகின்ற தாயின் சிதைகுரல்...!

வெற்றியின் சந்தோசத்தில்
        தழு தழுத்த நாவின்
தடுமாரிய சொற்க்கள்...!

தோல்வியில் தடம்மாறி
       ஆறுதல் கேட்டு
கனக்கின்ற கதைகள்...!

காரணமில்லாமல் சந்தோசப்படுகின்ற
       மனதின் மௌன மொழிகள்...!

வார்த்தையும் வனப்புதான்
       வழங்கப் படும் இடம் பார்த்து...!

Saturday, 7 July 2012

தியாகம்

எழுகின்ற சூரியன்
       துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
       பனித்துளி...!

விழிகளில் விழுகின்ற
       கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
       வாழ்கின்ற வாழ்வு...!

காதலெனும் கனவுகளில்
       கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!

தாய் மண்ணினை காக்க
       மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!

Saturday, 30 June 2012

மாலை

பிறை நிலவு
      பிறந்த நேரம்
அதன் அழகு
    முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!

ஜோடிப் புறா 
     வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!

வெயிலின் வாட்டத்தின்
     வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
      இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
      தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!

அன்பு மொழியினை
      பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
      கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
     அலங்கறிப்பதாய்...!

Sunday, 24 June 2012

தவறுதல்

அன்பு
      ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!

அறிவு
      காகிதம் அல்ல
கிழித்தெரிய...!

பாசம்
      பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!

நாட்கள்
        நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!

உண்மை
        உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!

இவைகளில்
         தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
          தவிர்க்க இயலாததே...!

Thursday, 21 June 2012

நிகழ்வு

மலர்

பூமியில் புதைந்திருந்த
        நீர்வலத்தில் நிறைந்த
உந்தன் புன்னகை....!

முட்கள்

வறண்டு போன பூமியில்
          வறண்டு போன உன் உதிரத்தில்
எழுந்த கோபம்...!

காதலன்

உந்தன் கோபத்திற்கு ஆலாகி
          புன்னகையை பரித்தான் தன்
புன்னகையை இழப்பதற்க்கு...!

Sunday, 10 June 2012

நிலவரம்

ஆயிரங்கள் கரைகின்றன
         ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!

நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
         நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
         நடுக்கம் கண்டாலும்...!

ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
         உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!

மாளிகைகள்
         மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
         இயல்பினை மறந்திருந்தாலும்...!

Saturday, 2 June 2012

வினாக்கள்

மனிதம் வளைந்து
         செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
         மனிதத்தின் மனப்படிவுகள்...!

மனித உணர்வுகளின்
         தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
         என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
        முதற் துடிப்பும்...!

இவ்விடை தெரியா
        வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
         தேடலாய் வாழ்வு...!

Saturday, 19 May 2012

அன்னையர் தினம்

உந்தன் உதிரத்தில்
       உருமாறியா உடல்...!

உந்தன் மூச்சிக்காற்றில்
       சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!

 உந்தன் முகம் பார்க்க
        முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!

பசிப்பதற்கு முன்
         பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
        அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!

நிஜ மனிதனாய்
       நில உலகில்
நடமாட துடித்த
        நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
      நிஜதினமாய்...!

Saturday, 5 May 2012

கோடை

எழுகின்ற சூரியனின்
          இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!


எற்றுக்கொண்ட தாகத்தை
        இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!


வறண்டு போன
        பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!


கண்ணிமைக்கும் நேரத்தில்
       கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
       மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
        மண்வாசனையும்...!

Sunday, 22 April 2012

வானம்

தூசுத் துகள்களின்
        தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
        தழைக்கின்ற தரணி...!

மேகத்துக்குள்
        முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
          நானத்தின்
திரைச் சீலை நீ...!

மனித இனம்
          உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
          கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
           வாழ்வு கரையாமலிருக்க...!

Saturday, 14 April 2012

மனிதன் மாறிவிட்டான்

காடுகளிள் அலைந்து
           திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
           நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
           ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
            மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!

அன்பெனும் ஆன்ற
            பெருமை கொன்று
ஆசையெனும்
            ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
            மனிதன் மாறிவிட்டான்...!

பரிவு என்னும்
             பாசவலை அறுத்து
பணமெனும்
            உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

திறமை என்னும்
           தரத்தை மறந்து
தகுதி என்னும்
           தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

Saturday, 7 April 2012

குழந்தை

மெல்ல தலைசைத்து
        சிரிக்கின்ற குறையில்லா
முழுமதியின் முகம்...!

மனித மன அழுக்குகளை
       ஏற்றுக்கொள்ளாத
பொன் சிரிப்பு...!

தோல்வியை தொடக்கமாக்கும்
       துவளாத இதயத் துடிப்பு...!

கண்களிள் கலங்கமில்லா
      கதை பேசும் கற்பனைகள்...!

இமயத்தைக் கண்டாலும்
        இயல்பில் மாறாத
இமைகளின் துடிப்புகள்...!

துவர்ப்பினை உணராத
        மனிதத்தின்
தூய்மையான துவக்கம்..!

Saturday, 31 March 2012

தென்றல்

தென்றலின் வருடல்
    தாய் மடியின் புரலல் போல்
தடம் புரியாமல்
    பெறப்பட்ட சுகம்...!

உன் தழுவலில்
    மனத்தின் தனங்கள்
தணியும் மருத்துவம்
    எங்கு கற்றாயோ...!

நீ தழுவி வந்த
    சுகந்தங்களின் வாசனை
எந்தன் மேலும் உந்தன்
        வருடலின் அடையாலமாய்...!

நீ திரிகின்ற திசையெலாம்
    சுற்றித்திரிய ஆசை
நலிந்துவிட்ட சாபத்தில் உந்தன்
    வருடல் மட்டும் வரமாய்...!

Saturday, 24 March 2012

இரவு

உயிர் உறைகின்ற நிசப்தம்
      நிஜம் கரைகின்ற கனவு
நிழல் தொடர்கின்ற நினைவு...!

மரண ஓலத்தை
      ஒலிக்கின்ற பறவை
சருகுகள் சலசலக்கும்
      சத்தத்தில் மறைகின்ற சர்ப்பம்...!

ஊளையிடுகின்ற நரியின்
      நரகக் குரல்
பதருக்கின்ற மனதிர்க்கு
      பாதை காட்டுகின்ற நிலவொளி...!

Saturday, 17 March 2012

வெற்றி

வாழுகின்ற காலமட்டும்
    வழுக்காத பாதையில்
நடக்காத பாதச்சுவடுகள்
    இல்லாது இருந்தாலும்...!

எடுந்து வைக்கின்ற
    பாதத்திற்க்கு பனிகின்ற
பனித் துளியாய்
    இந்த வெற்றி...!

கானல் வரும் போது
    காணாமல் போனாலும்
கற்று கொண்டவை
    கலங்கறை விளக்காய்

வாழுமட்டும்...!

Saturday, 10 March 2012

மங்கை

கடவுளின் வலிமயற்ற       
      படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
      குருச்சேத்திரப் போர்...!

பொறுமை என்னும்
      போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
       மதுரை இங்கே...!

மனித இன உணர்வுகளின்
       கருவறை  - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
      உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!


சிறுமியாய் வாழத் தொடங்கி
       சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
       எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
      விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!

Wednesday, 29 February 2012

அநாவசியம்


உந்தன் இமைக்கு அருகில்
      உலகின் உலைக்கலம்
சுழலும் போது
      உருகுகின்ற உள்ளம் உனக்கெதற்கு...!

நாளை கூட நிலையில்லை
     எண்ணும் பொழுது
நடுங்குகின்ற கால்கள்  எதற்கு...!

கனிவான உள்ளம் கூட
      காயப்படும் போது
எதிர் காலக் கனவெதற்கு...!

கண்கள் செல்கின்ற பாதையில்
      சென்றால் உன் கனவுகள் கூட
கரைக்கப் படும்...!

மனதை இருகவிடு
      மதியின் வலிமையில்
 உந்தன் ஆன்மாவின்
       உண்மை பொருள் தேட ...!


Saturday, 25 February 2012

வேற்றுமை

நிஜத்துக்கும் நினைவுக்குமான தூரம்
    நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!

மனிதத்தால் வாழ முடிவது
    வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
    வார்த்தைகளால் அல்ல...!

இருள் வந்தால்
    நிழல் விலகும்
இமை மூடினாலும்
    நிஜம் அருகினிலிருக்கும்...!

Friday, 17 February 2012

முதிர் கன்னி

வயதின் முதிர்வாலும்
       வருமையின் வளத்தாலும்
விழிகளின் விளிம்பினில்
      வழிகின்ற கண்ணீரில்
கரைகின்ற அவளுடைய
      நம்பிக்கை.....


Wednesday, 15 February 2012

ராணுவம்

கல்லினுல் ஊர்ந்தாய் எங்கள்
      கண்களில் கண்ணீர் துளி
கலங்காமலிருக்க...!

மலை முகடுகளில்
      சுற்றித்திறிந்தாய் எங்கள்
சுதந்திரம் பறிபோகாமலிருக்க...!

கடும் வெயிலிலும் குளிரிலும்
      தவமிருந்தாய் நம்
தடங்களை காப்பற்றி க் கொள்ள ...!

தாய் மண்ணைக் காக்க
      உயிர் துறந்தாய் மண்ணின்
தரமான படைப்பென்று... !

Saturday, 11 February 2012

சகுணம்

விடியும் வேலையில்
      விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
      வழி நடத்த...!

காலைக் கதிரவன்
      கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!

விடிகின்ற வேலையில்
      சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!

ஆலயமணி ஒளித்தது
      வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!

இயற்கை இயல்பாய்
      வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!

Friday, 3 February 2012

ஏழையின் கனவு

வாழுகின்ற வாழ்வை
     வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
     ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!

மலைமுகட்டில் முட்டி
    முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
     ஏழையின் கனவு...!

Saturday, 28 January 2012

எழுதல்

தோல்வியில் துவளாதே
      லேசரென நினைத்துக்கொள்
தடைகளில் தடுக்கப்பட்டு
      தரிகெட்டுப் போனாலும்...!

தன்னம்பிக்கையில் எழுந்து
     இலக்கினை நோக்க - அது
தன்னையே அற்ப்பனித்துவிடும்
      உன்னால் உணரமுடியா - அந்த
அசரீரி சக்திக்கு...!

Friday, 20 January 2012

தானே புயல்

பூமித்தாயின் பெருமூச்சா - நீ
       எங்களின் புன்னகையை
பறித்துக் கொண்டு இருக்கிறாய்.....

அவளின் கண்ணீர் துளியா
       இந்த மழை
மக்களின் மனக் கோட்டையை
      மூழ்கச் செய்தது....

தனியாய் வந்து
      தனிமையை கொடுத்தும்
உடைமைகளை பறித்துக்கொண்டு
     உயிர் மட்டும் விட்டு த்
தடம் பதித்த
    தரிகெட்ட ஆற்றலாய்......

Friday, 6 January 2012

மயக்கம்

உலகத்தின் அனைத்தையும்
      வலிமையால் பெற்றுவிடலாம்
உண்மையான உறவைத் தவிர.....

வெற்றியை பெற்ற வீரனென
      வீதியில் வலம் வரலாம் ஆனால்
உண்மையான உள்ளத்தை
      வெல்ல இயலாது.....

அயிரத்தில் ஆசை அணுக்கலை
      ஆடக்கி விடலாம்
அன்பான ஆறுதல் கிடைக்காது......

ஆசையை விதைத்தால் அங்கே
       அன்பை அறுவடை செய்ய இயலாது.....

மண்ணில் பிறந்த
       மனிதம் மயங்குவது தன்
உண்மை உறவுகளை
      அறிய முடியாததால் தான்.......