தொடர்வண்டியில் தொங்குகின்ற
ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!
எதனை மயக்க
இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!
அவள் செலவழித்த
நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
நினைவுதான் ஏனோ...!
பெற்றதனைத்தும்
அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
அவர்களின் கருவிழி...!
No comments:
Post a Comment