Friday, 21 September 2012

சொந்தம்

செத்துபோன சடலத்திற்கு
        சடங்கு செய்ய
உயிருள்ள ஜீவனை
        உதரித்தள்ள
உண்மை உணர்வுகளை
       விற்று விட்டு
நட்புடன் நடித்து பார்க்கும்
        நாகரிகக் கூட்டம்...!

பணமிருந்தால்
        பிணைந்துவிடும் பந்தம்
மனதை மட்டும் மறந்து விடும்
       மிடுப்புகளின் குழுமம்...!

உறுத்துகின்ற உறவுகளை
        உதறிவிட்டு - வாழ்வின்
வலிமையை கடக்க
        உடனிருக்கும் ஊண்களுக்காக
வாழ்கின்ற வாழ்வை
        சொந்தமாக்குங்கள் - இதன்
சுயத்தினை உணர்ந்து கொள்ள...!

No comments: