Monday, 3 September 2012

மௌனம்

மாலையின் மௌனத்திற்க்கு
      மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!

புல்வெளியின் மௌனத்தில்
      புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
      ஈரக்காற்று...!

தடு மாறிய குரலில்
      பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
      முகம்...!

அதிகார வர்க்கத்திடம்
       உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
       ஏழையின் மௌன மொழிகள்...!

மனதின் அழகினை
       மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
        உள்ளத்தின் ஊமைக்குரல்...!

No comments: