Saturday, 8 September 2012

வானவில்

வீசுகின்ற தென்றல்
        வீணையில் இசை மீட்டி
அதிருகின்ற அதிர்வைப் போல்
        மண் மீது மோதித் தெரிக்கின்ற
மழைத் துளிகள்...!

விட்டுவிட்டு பொழிகின்ற
       சாரல்கள் சரீரத்தில்
சருக்குகின்ற
       சங்கமத்தின் வருடல்கள்...!

அழகான மழைத்துளியின்
      அன்பான அர்ப்பணிப்பில்
திளைத்து விட்ட
      கதிரவனின் மெல்லிய
கதிர் வீச்சு...!

மோதிய மழைத் துளியில்
      சிதரிய சிற்ப்பங்களாய்
பகலவனின்
      கதிர் திரையில் தோன்றிய
வண்ணச் சிதறல்...!
 

No comments: