Sunday, 30 September 2012

நடைபாதை மாற்றம்

கனவுகளை காண்கின்ற
       சிந்தனையின் சிறகுகள்...!

ஊரின் நினைவுகளை
       நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!

சிதைத்தாலும் கூண்டுக்குள்
       வாழ நினைக்காத
நிந்தனைகள்...!

மனதில் தோன்றுகின்ற
        பரிவினை மறுக்காத மனம்...!

அன்னையின் இதயத்துடிப்பில்
       ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!

தடுமாரிய தடங்களை
       தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!

முன்னேற்றத்திற்க்கு முன்னே
       உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
       மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!

No comments: