பிறந்த குழந்தையின்
பிழையான சங்கீதம்...!
பழகிய நாவில்
தத்தையின் பிதற்றல்...!
காதுகளில் முனுமுனுக்கின்ற
கதலர்களின் காந்தக் குரல்...!
பிரிந்த சேயை
சேருகின்ற தாயின் சிதைகுரல்...!
வெற்றியின் சந்தோசத்தில்
தழு தழுத்த நாவின்
தடுமாரிய சொற்க்கள்...!
தோல்வியில் தடம்மாறி
ஆறுதல் கேட்டு
கனக்கின்ற கதைகள்...!
காரணமில்லாமல் சந்தோசப்படுகின்ற
மனதின் மௌன மொழிகள்...!
வார்த்தையும் வனப்புதான்
வழங்கப் படும் இடம் பார்த்து...!
No comments:
Post a Comment