Sunday, 14 October 2012

முன் இரவு

கதிரவனின் கடை பார்வையினை
         காரிருள் மெல்ல
வெற்றி கொள்ளும் நேரம்...!

தன் உணர்விழந்து
        ஆட்டமிடுகின்ற
அணிப்பிள்ளையின்
        ஆனந்த கூச்சல்...!

தென்றலின் தழுவலில்
        தன்னை சமர்ப்பனம் செய்யும்
சருகுகளின் சலசலப்பு...!

அரை நிலா அறை முற்றத்தில்
        வளம் வந்து கொண்டிருக்க
வெண்மை மேகம் மெல்ல
        அதன் நாணத்தை
மறைப்பதற்க்கான முயற்ச்சி...!

முழு இருளும் அங்கில்லை
        வெளி முழுவதுமான
வெளுப்பும் அங்கில்லை
        வெற்றியும் தோல்வியும்
பரிமாரிக்கொள்ளும் அனுபவத்தில்
        அழிந்துபோகும் ஆனவமாய் - இந்த
பகளிருல் பாலம்...!

No comments: