Saturday, 20 October 2012

காட்சி

தூரலை துணையாக்கி
      துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
       உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!

மின்சாரமில்லா அரங்கத்தை
      மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
      கலந்துவிட்ட ஆலய மணியோசை...!

இயந்திரத்தின் அசைவுகளில்
      தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர்  உறுப்புகளின்
       உன்னத ஓய்வு...!

வறச்சியினை நீக்க வந்த
      நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
       வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
       ஏற்ப்பட்டு போன வறச்சி...!

மொத்தத்தில் - நம்
      மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
      வீதியெங்கும்...!

No comments: