Saturday, 30 June 2012

மாலை

பிறை நிலவு
      பிறந்த நேரம்
அதன் அழகு
    முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!

ஜோடிப் புறா 
     வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!

வெயிலின் வாட்டத்தின்
     வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
      இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
      தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!

அன்பு மொழியினை
      பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
      கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
     அலங்கறிப்பதாய்...!

No comments: