ஆயிரங்கள் கரைகின்றன
ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!
மாளிகைகள்
மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
இயல்பினை மறந்திருந்தாலும்...!
No comments:
Post a Comment