Sunday, 10 June 2012

நிலவரம்

ஆயிரங்கள் கரைகின்றன
         ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!

நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
         நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
         நடுக்கம் கண்டாலும்...!

ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
         உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!

மாளிகைகள்
         மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
         இயல்பினை மறந்திருந்தாலும்...!

No comments: