Wednesday, 15 February 2012

ராணுவம்

கல்லினுல் ஊர்ந்தாய் எங்கள்
      கண்களில் கண்ணீர் துளி
கலங்காமலிருக்க...!

மலை முகடுகளில்
      சுற்றித்திறிந்தாய் எங்கள்
சுதந்திரம் பறிபோகாமலிருக்க...!

கடும் வெயிலிலும் குளிரிலும்
      தவமிருந்தாய் நம்
தடங்களை காப்பற்றி க் கொள்ள ...!

தாய் மண்ணைக் காக்க
      உயிர் துறந்தாய் மண்ணின்
தரமான படைப்பென்று... !

No comments: