Friday, 6 January 2012

மயக்கம்

உலகத்தின் அனைத்தையும்
      வலிமையால் பெற்றுவிடலாம்
உண்மையான உறவைத் தவிர.....

வெற்றியை பெற்ற வீரனென
      வீதியில் வலம் வரலாம் ஆனால்
உண்மையான உள்ளத்தை
      வெல்ல இயலாது.....

அயிரத்தில் ஆசை அணுக்கலை
      ஆடக்கி விடலாம்
அன்பான ஆறுதல் கிடைக்காது......

ஆசையை விதைத்தால் அங்கே
       அன்பை அறுவடை செய்ய இயலாது.....

மண்ணில் பிறந்த
       மனிதம் மயங்குவது தன்
உண்மை உறவுகளை
      அறிய முடியாததால் தான்.......

No comments: