Wednesday, 31 December 2014

வளர்ச்சி

சாலையோரப் பூக்கள்
     சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
     மரக் கூடுகளில்
உணவூட்டிய
     தாய்ப் பறவை
சர சரவென
      சாலையை
கடந்து சென்ற
     சாரைப் பாம்பு
பதற்றதில்
    தடம் புரண்ட
இரு-சக்கர
    வாகனம்...!
 
வீசிய காற்றின்
      ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
      அரைகண் மட்டும்
விழித்திருக்க
      வழி வந்தோர்
வாரி அனைத்து
     வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
     ஓலக் குரல்
நிறைந்துவிட
   நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
   ஒற்றை வார்த்தையும்...!

பசியெடுத்து
     உண்ணுகின்ற  உணவு
உழைத்துவிட்ட
     களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
     உலவுகின்ற
உயிரனங்களை
     உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
     சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
     வளந்திருந்த சந்தோசம்...!

Friday, 19 December 2014

பரிமாற்றம்

 திகைக்கின்ற
      திசையறியா  பாதையிலும்
உறைகின்ற
      பனியிலும்
துப்பாக்கி முன்னே
      உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
     காத்து நிற்கும்
காவலர்கள்
     ஒரு புறம்...!

கல்லறையின்
      கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
      பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
      பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
      மறு புறம்...!

தன் மக்களின்
     உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
     தலைமகனின்
உருக்கக் குரல்
    ஒறு புறம்...!

மகவுகளை இழந்தாலும்
     நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
    அடி மனத்தில்
பகையினில்
     தீவைக்கின்ற
திட்டக் குழு
    மறு புறம்...!

ஆயுதம் ஏந்திய
    அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
     தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
     கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!

தீய்மைக்கு தண்டனை
     தீமையென்றால்
 நீங்கள் திரும்பும்
    திசையெங்கும்
தணல் காடாகும்
    வரம் பெற்றவர்கள்...!

வாழ விடுங்கள்
    வாழப் பிறந்தவர்களை...!

Saturday, 15 November 2014

புதுத் தளிர்

வானவில்
      விட்டு சென்ற
வண்ணங்களின்
      சிதறல்களில்
உருகொண்டிருந்த
     தாய் முகம்...!
 
நெடுந்தூரப்
     பாதையில்
இரும்புப் பறவை
      விட்டு சென்ற
வழித்தடம்...!

வானத்தின்
      எல்லை வரை
பறந்துவிட
      வட்டமிட்டு
பறந்திருந்த
     வெண் பருந்து...!

வீசிய காற்றில்
        திசையறியாது
திகைக்கின்ற
       சிறுவனின்
காகிதப்
        பறைவை...!

வலிமை
      குறைந்தாலும்
உயிர் வாழ
      ஒளியூட்டிக்
கொண்டிருந்த
     பகலவன்...!

கருமேகங்கள்
      கலைந்தாலும்
இரக்கத்தில்
      பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
      புத்துணர்வு
கொண்டிருந்த
      புதுத் தளிர்...!

Friday, 17 October 2014

கற்பனை

நிழலுக்கும்
     நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
     விருச்சம்
இயல்புக்கும்
     இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
      கனவு...!

வரையறை தாண்டிய
      வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
      இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
      குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
      உணர்ந்துவிட்‌ட 
உண்மை - நம்மை
     விடுவிக்கும் வரை...!

கண்விழிக்கும்
      சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
      அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
       கற்பனையின்
சிறகுகளுக்கு
       வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
       விரிந்தபின்னும்...!

Sunday, 12 October 2014

சிவாலயம்

மாவிலையில்
     கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
     ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
     திரிகளின் வாடை
காற்றில்
     மிதந்திருக்க...!

மஞ்சள்  முக
       நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
       பூமேடையில்
மனம் புரிய 
       அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!

ஆலய மணியோசையும்
      ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
      குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
      மனித இனம்...!

எரிந்த நெய்
      விளக்குகள்
விட்டுச் சென்ற
      சூழ்நிலையும்
திகைக்காத
       நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
       மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
      சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
      செல்வமாய் - அச்
சிவாலயம்...!

Wednesday, 17 September 2014

நேர்மறை

பனி மூடிய சூழ்நிலையில்
     முழு முகம் காட்டிய
கதிரவனின்
      கதிர் வீச்சு...!

மை இருட்டில்
      மண் விளக்கில்
ஏற்றப்பட்ட
      தீப ஒளி...!

அநீதியை கண்டு
      நடுங்கி நின்ற
கூட்டத்திலிருந்தும்
      கல்லெறிந்த
சிறுவனின்
      மன எழுச்சி...!

உள்ளொன்று வைத்து
     புறமொன்று பேசும்
உறவு
     கொள்ளாமை…!

கடந்து வந்த
       தவறுகளில் வாழக்
கற்றுக்கொண்ட
       அறிவு...!

எறியப்பட்ட கற்கள்
      வாழ்வின் படிகளாய்
மாறுகின்ற
       வரம்...!

Sunday, 10 August 2014

இரயில் நிலையம்

நீல வானம்
     நில மகளின்
மீது கொண்ட
     காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
     வலுத்திருக்க...!

மித வேகத்து
      மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
      முகம் நனைத்த
மழைச் சாரல்...!

முகத்தின்
         பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
        கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
       முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
       அந்தி வானம்...!

எடுக்க எடுக்க
        குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
        தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
       தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!

Friday, 1 August 2014

நம்பிக்கையின் வேரா அவள்?

தடுமாறிய கால்கள்
       தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
       தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
       முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!

ஒருத்தி மட்டும்
       உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
      முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
       பிணைந்திருப்பது
அவள் உயிர்
       என்று சொல்லி...!

Friday, 25 July 2014

இறுதி நாள்

கற்பனையில் அந்த இறுதி நாள் ...


நீலவானம் - அன்று
     நெருப்பு மழை
பொழியும் - தான்
      எற்றுக்கொண்ட கரைகளை
கண்ணீறாய் வெளியேற்ற...!

சுற்றி வந்து தழுவலில்
       சுகம் தந்து செல்லும்
தென்றல் - அன்று
     தெளித்து விட்டு போகும்
தன்னை  சூழ்ந்துகொண்ட
     அழுக்குகளின் அமிலத்தில்...!

எழுகின்ற சுரியன்
       ஏரி பிழம்பினை
விட்டெறியும் நிலமகளின்
       நிலைகுலைந்த
ஈர்ப்பு விசை
   மாற்றத்தில்...!

அமைதியே உருவானவளின்
      அடிவயிற்றில் சேர்த்துவைத்த
கழிவுகள் கலங்கடிக்க
       மனித படைப்புகளுக்கு
வலை விரிக்ப் போகும்
       கடல் கன்னி...!
 

கோட்டைகளும் கோடிகளும்
        இமயம்  வரை ஓடி
ஒளிந்து கொள்ள
       ஒளி  உருவாய்  
தோன்றியவன்
        சொல்லப் போகும்
ஒற்றை வரி - இங்கு
        மனிதம் உருவாக்கிய
வேற்றுமைகள்
         உருவமற்று போனது - எந்தன்
மறு படைப்பிற்கு...!

Tuesday, 15 July 2014

பிறப்பு

முதன் முறை
     முகம் பார்க்க
கண் இமை திறந்த
     சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
      பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!

தாயின் கருவரை
      தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
      தொண்டைக் குழி
ஏறி இறங்க
      அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
     வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!

நாட்களுடைய மாற்றத்தின்
       மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
      விதைக்கப்போகும்
உணர்வுகளை
      வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
       வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!

Sunday, 29 June 2014

வண்ணத்துப் பூச்சி

வாழ்வின் வதைபாடுகளை
      உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
      சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!

உந்தன் பலம்
     திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
    வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
   அந் நாளிலே...!
  
உன் மேனியெங்கும்
     சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
     விளங்கமுடியா அதிசயம்...!

வாழ்வின் பாதியை
      கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
      சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
     வரம் உனக்கு...!

Thursday, 26 June 2014

தோய்வதுவுமில்லை

அன்பினில்
       தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
       தோய்வதுவுமில்லை...!

கஷ்டத்தில்
      சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
      சோரம் போவதில்லை...!

ஏழை இங்கு
      அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
      செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
      செல்வம்  தரும்
பலமும் -  தோய்ந்து
       போகும் வரை
தொடும்
        துரத்தில் இல்லை  - நாம்
தொலைத்து விட்ட
        நிம்மதி...!

Monday, 16 June 2014

இடி முழக்கம்

மலை முகடுகள்
     சுமந்து நின்ற
நிலவொளியின்
     மூன்றாம் பிறை...!
 
முல்லை நில
      நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
      வெண் தாமரை...!

ஆணை முகனின்
      அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
     அருகம் புல்...!

தூரத்தில் நின்று
      விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
      அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
     சிறுவன்...!

எட்டுத்திக்கும் நடுநடுங்க
      நெற்றி நடுவில்
அடித்‌தர் போல
      அச்சுருத்திய
இடி முழக்கம்...!

Saturday, 31 May 2014

அந்தி வானம்

புன்னகை அங்கே
       கொட்டிகிடந்தது
தோட்டத்தில் சில
      புதுப் பூக்கள்
மலர்ந்திருப்பதாய் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

சிதறிய பிம்பம்
     மீண்டும் சேர்வதாய்
சிலை வடித்திருந்த
    வெண் மேகங்கள்...!

தூரத்தில் நின்றிருந்த
    முழு நிலவின்
அழகினை
     படம்  பிடிக்க
வந்து சென்ற
     மின்னல் ஒளி...!

சிதறிய மழைத்துளி
     சித்தரித்த ஓவியமாய்
குடை பிடித்த
     வானவில்...!

மனம் மயங்கும்
      மண் வாசனை
ஒன்றிரடாய்
     விழுந்து  விட்ட
மழைத் துளியின்
      கலப்பினில்...!

கதிரவன் மறைகின்ற
      வேளையிலும்
கண்ணில் தென்படும்
      கலையழகு பிம்பங்கலாய் - இவ்
அந்தி வானம்...!

Wednesday, 21 May 2014

விதை

வீசிய புயல் காற்றில்
       சிதைந்திருந்த சிறகுகளுடன்
பாட்டாம் பூச்சி
       பாதி வயிறு பசித்திருந்தாலும்
பாவெமென உள்ளங்கையில்
       ஏந்தி வந்த சிறுவன்...!

மகானோ
       மண்டியிடச் சொன்ன
பழிக்கின்ற கூட்டத்தின்
       தலை மகன்
பட்டென கன்னத்தில்
       அரைந்து விட...!

அழுகையுடன் அவன்
       அனைத்து வந்த
ஜீவனின் துடிப்பும் - அவன்
      இதய நரம்புகளை
முறுக்கேற்றி
      கொண்டிருக்க...!

பாதை வழி
       பள்ளத்தில்
சறுக்கி விழுந்தவனின்
       சடலமட்டும்  கிடப்பதாய்
மூர்ச்சையாகி விட...!

ஓடி வந்த சிறுவனின்
       உதவ முடியா
கரங்களானாலும்
      உரைத்துவிட்ட குரலில்
உயிர் காத்து நிற்க
      விழுந்தவன் விழிகளில்
விழுந்ததோ - அவன்
      அறைந்த கன்னங்கள்
பல் வலியில்
      பருத்திருந்ததையே...!

உறக்கமில்லா இரவு
      விடிந்து விட
காத்து வைத்த
      அன்பின் கரம்  பற்றி
அழச் சென்றவன்
      கண்ணீர் விடுகிறான்
நேற்றிரவு பெய்திருந்த
     மழை வெள்ளத்தில்
இடிந்து விழுந்த
     காரைச் சுவற்றுக்குள்
சிதைந்திருந்த
     சடலத்திற்கு...!

இறந்தவன்  இன்றும்
       எங்கள் ஆசானின்
ஆண்டு முதல் உரையில்
       மனிதத்தின் மென்மையை
மொட்டாக இருக்கையிலே
       உணர்த்திய - எங்கள்
உண்மைத்
       தலைவனாக...!

Saturday, 10 May 2014

கிராமத்து நடை


பாவி மகள்
   பார்வை பட்டதில்
பாதி உயிர்
   பிரிந்துவிட
மீதி உயிர் கொண்டு
   வீடு வரை வந்தவன்
உறங்கையிலும்
   விழித்திருக்க...!

ஊரருகே ஓடிய
        ஆற்றங்கரையோரத்தில்
துங்கிச் செல்லும்
    ஒற்றை  வழிப் பாதையிலே
ஒற்றனைப் போல்
    காத்திருந்து - மனந்தவனின்
மீதி உயிர் 
    பிரிந்ததாம்
மனிதத்தில்  
    ஓட்டியிருந்த சாக்கடை
விட்டெரிந்த
    வாள் முனையில்...!

Thursday, 1 May 2014

கோழை

செயலில் தெரிய வரும்
        தவறுக்காக
செய்யாமல்
        இருப்பதும்...!

கண் முன்
        தோன்றிய எதிர்ப்புகளுக்காக
கண் நீர்
        விடுவதும்...!

எழுதிய மை -  நம்மை
        சுடுமென நினைத்து
உண்மையை
        உரைக்காமலிருப்பதும்...!

உயிருக்கும்
       உறவுக்கும் பயந்து
அடிமையாய்
       வாழ்வதும்...!

கிளியிடம் கோழையாய்
       கூண்டுக்குள்
வாழச் சொன்னது
       மனிதனின் ஆசை...!

சுதந்திரமாய்
        மரத்தினில்
சுற்றித் திரிய சொன்னது
       இறைவனின் படைப்பு...!


Let it be, how god has created rather than forcing and making it as our slave

Saturday, 19 April 2014

வாக்குகள்



விழுகின்ற வருடங்களின்
    வர்ணனையை மாற்றிக்கொள்ள
விலைமதிப்பற்றதென நெஞ்சினில்
          எழுதிக் கொள்வோம்
அழிந்துபோகா மையினை
    விரல் நுனி சுமக்கும் முன்னே...!

ஆராவாரம் அடங்கிவிடும்
    அச்சடித்த காகிதங்களும்
தீர்ந்துவிடும்  -    தீராதது
            நம் கனவுகளே - அதனை
கரைசேர்க்கும்
     கரங்களுக்கு கைகொடுப்போம்
கட்டிய கோட்டையில்
            ஏழைக்கான குரலும் ஒலித்திருக்க...!

மந்திரக் கோல் -   உன்னிடமே
    மனி மகுடம்
சூடிக் கொள்வது
    மனிதத்தை மதிக்கின்ற
மானுடமாகட்டும்
    அச்சடித்த காகிதங்களை
ஆராதிக்கின்ற  
    அர்ச்சகர்களை விட...!