வீசிய புயல் காற்றில்
சிதைந்திருந்த சிறகுகளுடன்
பாட்டாம் பூச்சி
பாதி வயிறு பசித்திருந்தாலும்
பாவெமென உள்ளங்கையில்
ஏந்தி வந்த சிறுவன்...!
மகானோ
மண்டியிடச் சொன்ன
பழிக்கின்ற கூட்டத்தின்
தலை மகன்
பட்டென கன்னத்தில்
அரைந்து விட...!
அழுகையுடன் அவன்
அனைத்து வந்த
ஜீவனின் துடிப்பும் - அவன்
இதய நரம்புகளை
முறுக்கேற்றி
கொண்டிருக்க...!
பாதை வழி
பள்ளத்தில்
சறுக்கி விழுந்தவனின்
சடலமட்டும் கிடப்பதாய்
மூர்ச்சையாகி விட...!
ஓடி வந்த சிறுவனின்
உதவ முடியா
கரங்களானாலும்
உரைத்துவிட்ட குரலில்
உயிர் காத்து நிற்க
விழுந்தவன் விழிகளில்
விழுந்ததோ - அவன்
அறைந்த கன்னங்கள்
பல் வலியில்
பருத்திருந்ததையே...!
உறக்கமில்லா இரவு
விடிந்து விட
காத்து வைத்த
அன்பின் கரம் பற்றி
அழச் சென்றவன்
கண்ணீர் விடுகிறான்
நேற்றிரவு பெய்திருந்த
மழை வெள்ளத்தில்
இடிந்து விழுந்த
காரைச் சுவற்றுக்குள்
சிதைந்திருந்த
சடலத்திற்கு...!
இறந்தவன் இன்றும்
எங்கள் ஆசானின்
ஆண்டு முதல் உரையில்
மனிதத்தின் மென்மையை
மொட்டாக இருக்கையிலே
உணர்த்திய - எங்கள்
உண்மைத்
தலைவனாக...!
No comments:
Post a Comment