Saturday, 10 May 2014

கிராமத்து நடை


பாவி மகள்
   பார்வை பட்டதில்
பாதி உயிர்
   பிரிந்துவிட
மீதி உயிர் கொண்டு
   வீடு வரை வந்தவன்
உறங்கையிலும்
   விழித்திருக்க...!

ஊரருகே ஓடிய
        ஆற்றங்கரையோரத்தில்
துங்கிச் செல்லும்
    ஒற்றை  வழிப் பாதையிலே
ஒற்றனைப் போல்
    காத்திருந்து - மனந்தவனின்
மீதி உயிர் 
    பிரிந்ததாம்
மனிதத்தில்  
    ஓட்டியிருந்த சாக்கடை
விட்டெரிந்த
    வாள் முனையில்...!

No comments: